வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' | 'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? | ரூ.5 கோடி தாண்டாத தமிழ்ப் படங்கள் : ரூ.50 கோடியைக் கடந்த மலையாளப் படங்கள் | வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி |
சில மாதங்களுக்கு முன்பு நடிகர் பிரித்விராஜ் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படம் கடுவா. ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் உருவான இந்தப்படம் வெளியாகி 50 நாட்கள் கடந்த நிலையில் தற்போது இந்த படத்தின் வெற்றி விழாவை கொண்டாடி உள்ளனர். இந்த படம் நிஜத்தில் வாழ்ந்த கடுவாக்குன்னால் குருவச்சன் என்பவரின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகி இருந்தது. இந்த நிலையில் இந்த வெற்றி விழாவின்போது பேசிய பிரித்விராஜ், இந்தப் படத்திற்கு இரண்டாம் பாகம் உண்டு என்றும், அது இந்த படத்தில் சீக்வல் ஆக இல்லாமல் ப்ரீக்வல் ஆக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
அதே சமயம் இந்த இரண்டாம் பாகத்தில் கடுவாக்குன்னல் குருவச்சனின் தந்தையான கொருத்து மாப்பிள்ள கதாபாத்திரத்தில் நடிக்க மோகன்லால், மம்முட்டி அல்லது சுரேஷ்கோபி இவர்களில் யாராவது ஒருவர் சம்மதிக்க வேண்டும்.. அந்த கம்பீரமான கதாபாத்திரத்திற்கு இதில் யாரவது ஒருவர் இருந்தால் தான் இந்த படத்தின் இரண்டாம் பாகம் மேற்கொண்டு நகரும் என்றும் கூறியுள்ளார் பிரித்விராஜ்.. ரசிகர்கள் பலரும் மம்முட்டி அல்லது சுரேஷ்கோபி இருவரில் ஒருவர் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்று தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.