Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

சொன்னா புரியாது

சொன்னா புரியாது,Sonna Puriyaadhu
  • சொன்னா புரியாது
  • மிர்ச்சி சிவா
  • வசுந்தரா
  • இயக்குனர்: கிருஷ்ணன் ஜெயராஜ்
06 ஆக, 2013 - 16:57 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » சொன்னா புரியாது

    

தினமலர் விமர்சனம்


‘சென்னை-28’, ‘தமிழ்படம்’, ‘தில்லுமுல்லு’ படங்களின் வெற்றியைத் தொடர்ந்து சிவா நடித்து வெளிவந்திருக்கும் திரைப்படம் ‘சொன்னா புரியாது’! இந்தப் படத்தின் கதையும் சொன்னா புரியாது.. ஹி... ஹி... படமா? பார்த்தாதான் புரியும்.. என்றாலும் நமக்கு புரிந்த வகையில் இதோ.. இதுதான் கதை. அதாகப்பட்டது,

ஹீரோ சிவா சரியான சோக்குப் பேர்வழி. குட்டி, புட்டி... என வாழ்க்கையை தனக்கு பிடித்தமாதிரி சரியாக என்ஜாய் பண்ணும் மனிதர். ஆனாலும் அவங்க அம்மா மீரா கிருஷ்ணனுக்கும் பாட்டி வத்சலாவுக்கும் அப்படி ஒரு நல்ல பிள்ளை! மகனுக்கு நல்ல பெண்ணாக பார்த்து திருமணம் செய்து வைக்க வேண்டுமென்பது மீரா கிருஷ்ணனின் ஆசை! ஆனால், சிவாவுக்கு கல்யாணம், மனைவி, குடும்பம் என்றாலே... ‘எங்‌கே தனது ஜாலி லைப் காலியாகிவிடுமோ?’ என்னும் பயத்தில் திருமணப் பேச்சே எட்டிக்காயாக கசக்கிறது! இருந்தாலும் அம்மாவின் பாதயாத்திரை பயமுறுத்தலுக்காக ஒரு பெண்ணை பார்த்து கல்யாணத்திற்கும் சம்மதிக்கிறார். அந்தப்பெண் ஹீரோயின் வசுந்தரா. அம்மணியோ, சிவாவுக்கும் ஒரு படி மேல்.. கேடி, கில்லாடி! அப்பா ஆர்.எஸ்.சிவாஜியின் பழைய பாடல் பயமுறுத்தலுக்காக கல்யாணத்திற்கு சம்மதிக்கும் தில்லாலங்கடி! இப்படி பெரியவர்களின் முன்னிலையில் இருவரும் திருமணத்திற்கு ஒப்புக்கொண்டுவிட்டு தங்களுக்கு நடக்க இருக்கும் திரமணத்தை தாங்களே தடுக்க போடும் மாஸ்டர் பிளான்கள் காமெடியாவதும், அதுவே இருவருக்குள்ளும் காதலை எழுப்புவதும்தான் ‘சொன்னா புரியாது’ (என்ன புரிந்ததா) படத்தின் மொத்த கதையும்!

நாயகர் சிவா, பேசுவது புரியாது, நிறைய பேசிக்கொண்டே இருப்பார் என்னும் பரவலான குற்றச்சாட்டு இந்தப் படத்திலும் பிரதிபலித்திருக்கிறது... என்றாலும் புரியாமல் எல்லாம் இல்லை... கடி, கொய்யா இலை வைத்திய காமெடி... ஓப்பனிங் சீனிலேயே நண்பனை அவமதிக்கும் இந்தி பார்ட்டி கூட்டத்தி்ல், ‘ரோசாஹே சின்ன ரோசாஹே... டபுள் சைடும் போட்டா தோசா‌ஹை...’ என ‘ரோசாப்பூ சி்ன்ன ரோசாப்பூ..’ ‘சூர்யவம்ச’ பாடலை தனக்கு தெரிந்த இந்தியில் டப் பண்ணி பின்னி பெடலெடுத்திருக்கும் ஆரம்ப காட்சியில் தியேட்டரி்ல் கேட்க ஆரம்பிக்கும் சிரிப்பு சப்தமும் விசில் சப்தமும் படத்தின் க்ளைமாக்சுக்கு முந்தைய இரண்டு ரீல் வரை அடங்கிவிடாதபடி படத்தை அனாயாசமாக நகர்த்தி செல்கிறார் மனிதர்! ஹேட்ஸ் ஆப் சிவா! கடைசி இரண்டு மூன்று ரீல்களையும் அதே பெப்பில் நகர்த்தி சென்றிருந்தீர்கள் என்றால் படம் இன்னும் நன்றாக இருந்திருக்கும்! சரி, அதுபோகட்டும்.. நைஸ் கோட்,  இப்போ நைட் நேரம் எல்லா கல்யாண மண்டபமும் மூடியிருக்கும். காலையில போய் பார்க்கலாம்... உள்ளிட்ட டயலாக்குகள் எல்லாம் டயலாக் வெடிகளா?! ஹாவ்! என்னமா வயிறு வலிக்க சிரிக்க வைக்கிறீர்கள் சிவா?! ஆனாலும் தமிழ் படத்தில் ஆரம்பித்த குசும்பு படத்துக்கு படம் பிறர் படங்களை நக்கலடித்தே தீர வேண்டுமா என்ன? கொஞ்சம் யோசியுங்கள்!

நாயகி வசுந்தரா, சிவாவுக்கு ஏற்ற ஜோடி. சில இடங்களில் நடிப்பில் சிவாவையும் தூக்கி சாப்பிட்டு விடுகிறார் அம்மணி! பேஷ்! பேஷ்!

சிவா, வசுந்தரா மாதிரியே கங்கை அமரன், சிங்கமுத்து, ஆர்த்தி, ஆர்.எஸ்.சிவாஜி, மீரா கிருஷ்ணன், அல்வா வாசு, பிளேடு சங்கர், வத்சலா பாட்டி, ஃபன் ஆண்டர்சன் உள்ளிட்ட கெஸ்ட் ரோல், டெஸ்ட்ரோல் நடிகர்களும் சும்மா ஒரு பேச்சுக்கு கூட பெஸ்ட்ரோல் செய்திருக்கின்றனர். அதிலும் அந்த வத்சலா பாட்டி இவருக்கு எஃப்.பி.ன்னா ‘பேஸ் புக்’குன்னு தெரியலை.. இந்த ஆளு பாரஸ்ட்லேயே இருந்திருக்கலாம்., இந்த வீட்டுல பொண்ணு எடுக்க வேணாம்.. என ரிட்டயர்டு பாரஸ்ட் ஆபீசர் - ஆர்.எஸ்.சிவாஜி முன் ‘டேபும்’ கையுமாக அலட்டும் அலட்டல் இருக்கிறதே! அடி ஆத்தி... சரியான ஆளைத்தான் சிவாவின் பாட்டி ஆக்கி இருக்கிறார் இயக்குநர் கிருஷ்ணன் ஜெயராஜ்!

சிவா - வசுந்தராவின் இயல்பான நடிப்பு, சரவணன் சந்துருவின் நச்-டச்-வசனம், யத்தீஷ் மகாதேவ்வின் இனிய இசை, சரவணனின் அழகிய ஒளிப்பதிவு, கிருஷ்ணன் ஜெயராஜின் எழுத்து, இயக்கம் உளளிட்ட ப்ளஸ் பாயிண்ட் ‘சொன்னா புரியாது’. படத்தில் இன்டர்வெல்லுக்கு பின்னான இழுவை உள்ளிட்ட ஒரு சில குறைகளை பெரிதாக வெளிக்காட்டாதது ஆறுதல்!

ஆக மொத்தத்தில் ‘சொன்னா புரியாது’ - ‘பார்த்தா புரியும்’.. ‘பார்க்கப் பார்க்க புடிக்கும்!’


----------------------------------------------------------------------


குமுதம் விமர்சனம்


டும் டு்ம் டும் கதைதான்! ஆனால் கலாய்ப்பு சோடாவை நிறைய காமெடி சரக்குடன் மிக்ஸ் செய்து ஊறுகாயுடன் பரிமாறியிருக்கிறார்கள்.

(ஹிஹி, படத்துல எல்லாரும் எப்பவும் சரக்கு அடிச்சுக்கிட்டே இருக்காய்ங்களா? அந்த ஃப்லோவுல அப்படியே வந்துடுச்சு பாஸ்!)

சிவாவுக்கும் (அகில உலக சூப்பர் என்று பட்டம் எல்லாம் போட்டுக் கொள்ளாததற்கு ஒரு பாராட்டு) வசுந்தராவுக்கும் கல்யாணம் நிச்சயம் செய்கிறார்கள்.ஆனால் இருவருக்குமே திருமணத்தில் ஆர்வம் இல்லை. சில பல அஜால் குஜால் வேலைகளைச் செய்து திருமணத்தை நிறுத்துகிறார்கள். அப்புறம் என்ன ஆச்சு என்பதை சொன்னா புரியாது!

சிவா, அஸால்ட்டாக அசத்துகிறார். வார்த்தைக்கு வார்த்தை இயல்பாக வரும் அந்த அப்பாவித்தனம் கலந்த நக்கல் செமை. அதுவும் ரொம்ப சீரியஸான கட்டத்தில் ‘கிருஷ்ணருக்கு மாடு ஃப்ரெண்டாமே?’’ என்று அவர் கேட்கும்போது தியேட்டர் வெடிக்கிறது! ‘இப்ப கூட நான் கண்ணை மூடிக்கிட்டா உன் நினைப்புதான்’ என்று காதலியிடம் சொல்லிக் கண்ணை மூட, ‘பில்லா நயன்தாரா’ அங்கே க்ராஸ் பண்ணிப் போவதும், ‘தமிழ்ப்படம்’ புகழ் பரதநாட்டியம் ஆட முயற்சித்து சிவா எதிரியைக் காலில் விழ வைக்கும் காட்சியும் கலகலப்பின் உச்சா!

இன்னும் வாகாக ஹீரோ, டப்பிங் படங்களுக்கு தமிழ் வாய்ஸ் கொடுக்கும் கேரக்டர் என்பதால் ஜாக்கி சான், ஜெட் லீ வரை உள்ளே இழுத்துப் போட்டிருப்பது இயக்குநர் கிருஷ்ணன் ஜெயராஜின் சாமர்த்தியம்! சிவாவின் சின்ன வயது காஸ்ட்லி கார் கனவுக்குத் தரும் பில்டப் இருக்கிறதே. உலகம் தாங்காதுடா! சாமீய்ய்ய்!

சிவாவின் கூடவே இருக்கும் நண்பர்களும் களை கட்டுகிறார்கள். சிக்கன் பீஸை எடுத்ததால் காதலை முறிக்கும் அந்த குண்டனும் பலே.

காமெடிப்படம் என்றாலே மர்ம ஸ்தானத்தில் அடிபடுவதும் வாடிக்கையாகிவிட்டது. இதிலும் அஃதே. ஆனால் அதை நேரம் கிடைக்கும்போதெல்லாம் ‘பார்த்து பந்தாடுகிறார் சிவாஜி!’

ஒரு படத்திலேயே அகில உலக, நெப்ட்யூன் வரை புகழ்பெற்ற சாம் ஆண்டர்ஸனை ஒரு டான்ஸ் ஸ்டெப் போட வைத்திருக்கிறார்கள். ஙொக்கமக்கா!

‘சொன்னா புரியாது’ மேடை நாடகம் போன்று சும்மா பேசிக் கொண்டேயிருக்கிறார்கள் என்றாலும் தியேட்டரில் சிரித்துக் கொண்டேயிருக்கிறார்கள்.

குமுதம் ரேட்டிங் - ஓகே.


-----------------------------------------------------------------------



நமது தினமலர் இணையதளத்தின் சினிமா பகு‌தியில், பல படங்களின் விமர்சனங்கள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன. சில வாசகர்கள் தங்களது பிளாக்குகளில் திரைப்படங்களின் விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர். அவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, வாசகர்களின் விமர்சனங்களும் தினமலர் இணையதள சினிமா பகுதியில் இடம்பெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்...

வாசகர் சி.பி.செந்தில் குமாரின் விமர்சனம்

அவரது பிளாக் முகவரி : www.adrasaka.com


மாதவன் ஜோதிகா ஜோடி நடிச்ச டும் டும் டும் படக்கதை முன் பாதி பூராவும், இடைவேளைக்குப்பின் கொஞ்சம் ஹேங்க் ஓவர் ஹாலிவுட் படத்தில் இருந்து கொஞ்சம் உருவி க்ளைமாக்ஸில் சொந்தச்சரக்கு 2 ரீல் சேர்த்தால் ஒரு புது படம் தயார்.
 
மேரேஜ் பண்ணிக்கிட்டா டெய்லி ஒரே வீட்டுச்சாப்பாடு தான் சாப்பிடனும் , மேரேஜ் பண்ணலைன்னா டெய்லி விதம் விதமா வெளீல சாப்பிடலாம் , யாரும் கேள்வி கேட்க மாட்டாங்க என்ற நல்ல கொள்கை உள்ளவன் ஹீரோ . இவன் தண்ணி அடிப்பான் , பொண்ணுங்களோட சுத்துவான், ஆனா தமிழ் சினிமா பாரம்பரியப்படி நல்லவன்.
இப்படிபட்ட ஆளுக்கு அவனை மாதிரியே மேரேஜ் பண்ணிக்க பிடிக்காத சரக்கு அடிக்கும் சந்திரிகாவை எதேச்சையா பொண்ணு பார்க்கறாங்க, 2 குடும்பமும் சேர்ந்து ஏற்பாடு செய்யும் அந்த மேரேஜை எப்படி 2 பேரும் சேர்ந்து தடுக்கறாங்க? பின் எப்படி அவங்க 2 பேரும் லவ்வறாங்க என்பதை எவ்வளவு நிதானமா கதை சொல்ல முடியுமோ அவ்வளவு நிதானமா சொல்றாங்க. உஷ் அப்பா ஜவ்வுன்னா ஜவ்வு அப்டி ஒரு ஜவ்வு.

சிவாவுக்கு ஓப்பனிங்க்லயே ஒண்னே ஒண்ணு சொல்லிக்கறேன். கே பாக்யராஜோ , எஸ் வி சேகரோ , கமலோ அவர் கிடையாது . எல்லா சீன்லயும் தானே டாமினேட் பண்ணனும் , எல்லாரையும் மட்டம் தட்டி தான் கை தட்டல் வாங்கிக்கனும் என்ற எண்ணத்தை மாத்திக்கனும். 10 சீன்ல அப்டின்னா பரவாயில்லை, சீனுக்கு சீன் அப்டின்னா எப்படி? மத்தபடி அவர் டைமிங்க் விட் , எல்லாரையும், கலாய்க்கும் ஹியூமர் சென்ஸ் , சோக சீன்களில் கூட காமெடி பண்ணுவது எல்லாம் ஓக்கே . காமெடி நடிகர்னா முகத்தில் கொஞ்சமாவது எக்ஸ்பிரஷன் காட்டனும் , நாகேஷ் , வடிவேல் இதுக்கு நல்ல உதாரணம், அதே போல் பாடி லேங்குவேஜ் க்கு கவுண்டமணி , செந்தில் நல்ல உதாரணம் . சிவாவுக்கு இந்த 2ம் வர்லை . டெவலப் பண்ணிக்கனும் , நல்லா வருவார்.

ஹீரோயின் வசுந்த்ரா. சூரியகாந்திப்பூவை நல்லெண்ணெய் பாட்டில்ல போட்டு வெச்ச மாதிரி அவ்வளவு தெளிவு அவர் முகம் . பீட்ரூட்டை வெய்யில்ல காய வெச்சது மாதிரி ஒரு இளஞ்சிவப்பு உதடு, மயில் தோகைல ஐ டெக்ஸ் மை தடவிய மாதிரி ஒரிஜினல் கூந்தல் (இழுத்துப்பார்த்தியா?) ஆஹா. இவர் தமிழ் சினிமாவில் நல்லா வளர வாய்ப்பு இருக்கு. இன்னும் காம்ப்ளான், பூஸ்ட் எல்லாம் சாப்பிட்டா அபாரமா வளர்ச்சி வரலாம் .இப்போதைக்கு இது போதும். இவருக்கு நடிக்க ஏகப்பட்ட வாய்ப்பு. பின் பாதியில் ஹீரோ மேல் காதல் வந்ததும் அவர் முகத்தில் வரும் வெட்கம் குங்குமப்பூ சிவப்பு , லவ்வை சொல்லலாமா? வேணாமா? என பரிதவிப்பது அபாரம். ஹீரோவின் அம்மாவாக வருபவர் நல்ல குணச்சித்திர நடிப்பு

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்
 

1. ஆர்.பார்த்திபன் கவுண்டமணி நடிச்ச வீ ஆர் நாட் டாட்டா பிர்லா மாதிரி, ஜேம்ஸ் பாண்ட் டைப் காமெடி ஆக்‌ஷன் படம் போல் ஒரு போஸ்டர் டிசைனை உருவாக்கியது.
 
2. பத்திரிக்கை, டி வி , மீடியா பேட்டிகளில் இது டும் டும் டும் படத்தின் அப்பட்டமான தழுவல் என்பதை மூச்சு விடாதது.

3. ஹோம்லியான ஃபிகரை ஹீரோயின் ஆக்கியது. தேவையான இடங்களில் அவரை ஸ்லோமோஷனில் ஓட விட்டு, குதிக்க விட்டு கேமரா மேனை மொட்டை மாடிக்கு அனுப்பி சரியான கோணத்தில் படம் ஆக்கியது ( 6 சீன் )

4. ஹீரோ சிவாவின் டைமிங்க் விட், காமெடி சென்ஸ், ஹீரோயினின் முக வசீகரம் அழகான நடிப்பு.
 
5. உங்களுக்கு எல்லாம் எத்தனை தடவை சொன்னாலும் புரியாது , படத்தை பார்த்தாதான் பட்டுத்தெளிவீங்க என்னும் அர்த்தம் வரும் விதத்தில் டைட்டில் வைத்தது

6. மேரேஜை நிறுத்த ஹீரோவுக்கு அந்த இடத்தில் அடிபட்டு பல்பு ஃபியூஸ் போன விதத்தை காமெடியாக்கி, அடிக்கடி அது போல் சீன் வைத்தது சபாஷ். ஆடியன்ஸ் செம ரசிப்பு!

இயக்குநரிடம் சில கேள்விகள்

1. மேரேஜ்க்கு பெண் பார்க்க மாப்ளை வீட்டுக்காரர் வரும்போது பாரம்பரியம் மிக்க பண்பாடு மிக்க குடும்பப்பெண்ணாக வருபவர் ஸ்லீவ் லெஸ் ட்ரான்ஸ்பெரண்ட் ஜாக்கெட் தான் போட்டுட்டு வருவாரா? லோ ஹிப் வேற. தர்ம தரிசன தேவியா அவரு?
 
2. படத்தில் ஹீரோயின் யார் கிட்டே பை பை சீ யூ சொன்னாலும் இடது கையால தான் சொல்றார். அதுதான் நாகரீகமா?

3. ஹீரோயின் மஞ்சள் பூசி மங்களகரமாக இருக்க வேண்டாம், அட்லீஸ்ட் குங்குமப்பொட்டு வைத்தாவது நீட்டாக இருக்க வேண்டாமா? ஒரு சீனில் கூட அப்டி இல்லை , ஆல் ஸ்டிக்கர் பொட்டுதான் ( மாடர்ன் கேர்ள்ஸ்ன்னா பெண் பார்க்கும் படலத்தில் கூட அப்டி இருக்கக்கூடாதா?)
 
4. பொண்ணு சரக்கு அடிக்குது , எல்லாம் பண்ணுது , ஆனா பாய் ஃபிரண்ட்ஸ் கூட டேட்டிங் போகுதா? இல்லையா? என்பதில் தெளிவு இல்லை.
 
5. அதே போல் ஓப்பனிங்க்கில் ஹீரோ கோகுலத்தில் சீதை கார்த்திக் மாதிரி கில்மா மன்னர் என காட்டி விட்டு தொபுக்கடீர் என்று அவருக்கு எல்லாம் ஜஸ்ட் கேர்ள் ஃபிரண்ட்ஸ் தான் என பம்முவது.
 
6. ஹேங்க் ஓவர் காப்பி சீன்கள் படத்துக்குத்தேவை இல்லை. இடைவேளை ட்விஸ்ட்டுக்கு வலியத்திணிக்கத்தேவை இல்லை. இன்னொரு முக்கிய பாயிண்ட், திரைகக்தையில் தேவை இல்லாமல் ஒரு காமெடி படத்துக்கு இடைவேளை ட்விஸ்ட் தேவை இல்லை ( வலுவந்தமா)
 
7. லவ் வந்த பின் ஹீரோயின் ஆக்டிங்க் அபாரம், ஆனா ஹீரோ ஏன் முகத்தில் ஃபீலிங்கே காட்டலை ? ஹீரோயின் மாதிரி அவர் அளவுக்கு கிளாமர் தான் காட்ட முடியாது , உணர்ச்சி காட்ட ஏது தடை?

8. பட முதல் பாதியில் பி ஜி எம்மே ( பின்னணி இசை) போடலை , ஒய் ஜி மகேந்திரன் டிராமா மாதிரி மொக்கையா போகுது.
 
9. க்ளைமாக்சில் வரும் டி.வி போட்டி மகா மொக்கை, கடந்த 20 வருட சினிமா வரலாற்றில் இவ்வளவு மொக்கையான க்ளைமாக்ஸ் ராமராஜன் படத்தில் கூட இல்லை.


மனம் கவர்ந்த வசனங்கள்
 

1. ஸாரி சார்.நோ கட்டிங். 1லார்ஜும், ஒரு ஸ்மாலும் சேர்ந்தா அது தான் ஒரு கட்டிங்.இது கூடத்தெரியாம.உன்னை யார் வேலைக்கு சேர்த்தது ?

2. தமிழ் நாட்டு மானத்தை நீங்க தான் காப்பாத்தனும்.  ரோசா ஹை தில் மே ரோசா ஹை.மை தேரே பி ரேக் பாஸ்ட் தோஸா ஹை.
 
3. மிஸ். இங்க நாய்ஸ் ஜாஸ்தி. வாய்ஸ் நாஸ்தி.  பீச்க்கு போய்ட்டா வசதி.

4. உன் கிட்டே ஒரு முக்கியமான விஷயம் பேசனும்.  நீ என்ன பேசப்போறேனு எனக்குத்தெரியும். நீ பாட்டுக்கு பேசிட்டு இரு. இதோ வந்துடறேன்.
 
5. இந்த நாள் உன் டைரில குறிச்சு வெச்சுக்கோ. இப்டி சொல்லி சொல்லியே ஆல்ரெடி 4 டைரி புல் ஆகிடுச்சு.
 
6. டேய். அதுக்குள்ளே எப்டிடா அவளை கரெக்ட் பண்ணே?  விடுறா.அழகா இருந்தாலே இந்த மாதிரி பிரச்னை வரத்தான் செய்யும்.

7. டெய்லி குடிக்கலாமாடா ? க்ரியேட்டிவ் பியூப்பிள்னா அப்டித்தான். ( தவறான கருத்து)

8. என் பையனுக்கு தண்ணி அடிக்கும் பழக்கம் எல்லாம் இல்லை.ஆனா டெய்லி நைட் வீட்டுக்கு வரும்போது கொய்யாப்பழம் சாப்டுட்டு வருவான்.

9. கோயில்ல ஆந்திரப்பிரதேசமா? அய்யோ அது அங்கப்பிரதட்சணம். உருண்டு உருண்டு வருவாங்கள.

10 உன் கல்யாணத்தன்னைக்குதான் பிளான் பண்ணி என் கல்யாணத்தை நிறுத்தப்போறேன். எப்டியோ என் மேரேஜை நிறுத்தாம இருந்தா சரி.
 
11. எங்க ஊர்ல சரக்கடிச்சா ஊரை விட்டுத்தள்ளி வெச்சுடுவோம்.  நாங்கதான் உங்க ஊரே இல்லையே? அப்போ இதே ஊர்ல தங்க வெச்சுடுவோம்.

12 இதை நம்பாதீங்க. போட்டோ ஷாப் ல ஒர்க் செஞ்ச போட்டோ. பின்னே மெக்கானிக் ஷாப்லயா ஒர்க் செய்வாங்க?

13. பெரிய பெரிய படைப்பாளிகளுக்கு சரக்கு அடிச்சுட்டு டக் ஆனாத்தான் ஐடியாவே வருமாமே? உண்மையா ?

14. மேட்டரே இல்லை.அதான் மேரேஜை நிறுத்திட்டோம

15. சின்ன வயசுல கிரிக்கெட் விளையாடும்போது ஒருத்தன் புல்டாஸ் பால் போட்டான்.அதை அடிக்க பேட்டை ஓங்கினேன்.பால் (BALL) மிஸ் ஆகிடுச்சு.ஹி ஹி.
 
16. 3 தடவை அந்த சம்பவம் நடந்துச்சு. ஓஹோ, பட்ட கால்லயே படும் பாங்க்ளே அப்படி ?

17. ஸ்வேதா வண்டில போய் அவளை டிராப் பண்ணிட்டு அப்டியே என்னையும் டிராப் பண்ணிக்கவா ? வேணாம். அவளே அவளை டிராப் பண்ணிக்கறாளாம்.

18. இப்போ தான் வரும் , இப்போ தான் போகும்னு கணிச்சு சொல்ல இது கரண்ட் இல்லை. காதல். அது எப்போ வேணாலும் வரும்.

19 அவன் எவ்வளவு பீல் பண்ணி தன் சோகத்தை கொட்டிட்டு இருக்கான். ஆப் பாட்டில் வாங்கிட்டு வரவா? னு கேட்கறியே? எப்டிடா பத்தும்? புல் வேணும்.

20. என்னடா சொல்றே? கடைசில அவன் உன் ஆள் பிளேட்ல்யே கை வெச்சுட்டானா?

21. எனக்காக நீங்க 2 பேரும் ஏன் 1 சேரக்கூடாது ? எனக்காக நீ ஏன் சாகக்கூடாது ?

சி பி கமெண்ட் -
ஏ செண்ட்டர்ல மட்டும் சுமாரா போகும், காமெடி ப்ரியர்கள் சிவாவுக்காக டி.வி.,-ல போடும்போது பார்த்துக்கலாம், மத்தபடி படம் தேறாது.



வாசகர் கருத்து (1)

janani - krishnagiri,இந்தியா
16 ஆக, 2013 - 18:17 Report Abuse
janani இவன் எல்லாம் படத்துல நடிக்கலன்னு யார் அழுதது
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
தொடர்புடைய படங்கள்

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in