Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

நீ உன்னை அறிந்தால்

நீ உன்னை அறிந்தால்,
  • நீ உன்னை அறிந்தால்
  • முரளி
  • குஷி
  • இயக்குனர்: இந்தியன் பாஸ்கர், ரிஷி ராஜ்
07 ஜூலை, 2009 - 00:00 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » நீ உன்னை அறிந்தால்


தினமலர் விமர்சனம்


கூடா நட்பு, கூடாரத்தையே காலி செய்து விடும் என்பதை சொல்லாமல் சொல்லி வந்திருக்கும் படம்!

சென்னையின் குப்பத்து ராஜாக்கள் முரளியும், ரிஷி ராஜூம். லோடு ரிக்ஷா தொழிலாளிகளான இருவரும் சிறுவயது முதலே உடன்பிறவா சகோதரர்களாக ஒரே குடிசையில் வளர்ந்து ஆளாகிறார்கள். இருவரில் முரளிக்கு முதலில் திருமணம் நடக்கிறது. அவர் புது மனைவி குஷியோடு (புதுமுக நடிகை) குடியும் குடித்தனமுமாக சந்தோஷ வாழ்க்கை நடத்த, ரிஷிராஜ் குடியும், கூத்தியுமாக சாக்கடை வாழ்க்கை வாழ்கிறார். இதனால் குஷிக்கு, ரிஷி மீது வெறுப்பு. இருந்தாலும் ஆசை கணவர் முரளிக்காக அட்ஜஸ்ட் செய்து கொண்டு வாழ்கிறார். இந்நிலையில் எதிர்பாராத விதமாக ஒருநாள் குஷியை ரிஷி பலாத்காரம் செய்துவிட, அதில் குஷி இறந்து போகிறார். இதன் பின் என்ன? என்பதும், துப்பு கிடைத்த பின் நட்பு என்ன ஆனது என்பதும் மீதிக்கதை!

குப்பத்து ஏரியாவுக்குள்ளேயே கதை பயணிப்பதும், கானா பாட்டு, லோடு ரிக்ஷா, இட்லிக்கடை, குடி, கூத்தியாள், தெருச்சண்டை என்று ஒரே விதமான காட்சிகள் சற்றே‌ போர். குஷியின் மரணத்திற்கு பிறகாவது முரளி ஆக்ஷனில் இறங்குவார் என்று பார்த்தால், அதன் பின்னும் அழுது வடிவது ‌மேலும் ஒரு கொடுமை!

முரளி, ரிஷிராஜ், லோடு ரிக்ஷா என மாறி மாறி பார்ப்பதை இன்னும் சற்றே தவிர்த்து முரளியின் தாய் பாசத்தையும், மனைவி ஆகும் மாமன் மகள் மீதான பாசத்தையும் அழுத்தமாக காட்டியிருந்தால் ஜெயித்திருக்கலாம். அம்மாம் பெரிய உருவத்தை தூக்கிக் கொண்டு ரிஷி, பாட்டிலும், கையுமாக பண்ணும் கலாட்டாக்கன் என்னதான் குப்பத்து பேக்ரவுண்டு என்றாலும் ரொம்பவே ஓவர்.

ரிஷியின் ஆர்ப்பாட்டங்களை விட, முரளியின் அழுகையும், அமைதியுமான நடிப்பு கச்சிதம். அறிமுக நாயகி குஷி, அம்மா கேரக்டர் டி.கே.கலா, அரவாணி மாமி(!) இந்தியன் பாஸ்கர், அழகி ரிஷா எல்லோரும் பாத்திரத்திற்கேற்ற தேர்வு. இரட்டை இயக்குனர்கள் இந்தியன் பாஸ்கருக்கும், ரிஷி ராஜூக்கும் இசையமைப்பாளரும், ஒளிப்பதிவாளரும் கைகொடுத்த அளவு, கதையும், காட்சி அமைப்புகளும் கை கொடுக்காதது வருத்தம்!

நீ உன்னை அறிந்தால் என படத்திற்கு டைட்டில் வைத்தவர்கள், நல்ல கதையை அறிந்திருந்தால் பேஷா இருந்திருக்கும்...!



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
தொடர்புடைய படங்கள்

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in