ஐஎஸ்எம்
நாயகன் - கல்யாண் ராம்
நாயகி - அதிதி ஆர்யா
இயக்குனர் - பூரி ஜெகன்நாத்
தெலுங்கு திரை உலகின் ஆக்ஷன் ஸ்பெஷலிஸ்ட் இயக்குனர் பூரி ஜெகன்நாத்தின் அதிரடியான ஆக்ஷன் திரைக்கதையில் உருவாகியிருக்கும் ஐஎஸ்எம் படத்தின் முன்னோட்ட காட்சிகள், நாயகன் கல்யாண் ராமின், சிக்ஸ்பேக் தோன்றத்துடன் கலக்கலாக வெளிவந்து இப்படம் குறித்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை, ஐஎஸ்எம் திரைப்படம் எந்த அளவிற்கு பூர்த்தி செய்துள்ளது என பார்ப்போம்.
யுரோப்பில் நாயகி ஆலியா கான்(அதிதி ஆர்யா)-ஐ துரத்தி துரத்தி காதலிக்கும் நாயகன் சுல்தான்(கல்யாண் ராம்) ஒரு வழியாக நாயகியை தனது காதல் வலையில் வீழ்த்துகின்றார். ஆலியாவின் தந்தை, இந்தியாவில் தேடப்படும் டான்-ஆன ஜேவ்ட் இம்ரஹீம் (ஜெகபதி பாபு).
யுரோப்பில் பேரடைய்ஸ் வங்கி நடத்தி வரும் ஜேவ்ட் இம்ரஹீம், அந்த வங்கியில் இந்தியாவில் வாழும் செல்வந்தர்களின் கருப்பு பணத்தை பாதுகாத்து வருகின்றார். சுல்தான் தனது காதலியின் தந்தை இம்ரஹீமிடமும் காதலுக்கு சம்மதம் வாங்குகின்றார்.
ஆலியாவிடம், இம்ராஹீமின் வங்கி கணக்கு பாஸ்வேர்டை அறிந்து கொள்வதற்காகவே சுல்தான் அவரிடம் நெருங்கி பழகிய விபரம் இம்ராஹீமிற்கு பின்னர் தெரிய வருகின்றது. அதற்குள் கருப்பு பணத்துடன் இந்திய திரும்பி விடுகின்றார் சுல்தான். சத்யா எனும் பத்திரைக்கையாளராக அறியப்படும் சுல்தான் மாஸ்க் அணிந்து கொண்டு ஊழலை ஒழிக்கும் முயற்சியில் செயல்பட்டு வருகின்றார். .இந்த விபரங்கள் அறியும் இம்ராஹீம், சத்யாவுடன் மோதுகின்றார். இந்த போராட்டத்தில் யார் வென்றது, சத்யாவின் எண்ணம் ஈடேறியதா,? என்பது தான் ஐஎஸ்எம் படத்தின் மீதிக்கதை.
உடலை வறுத்தி சிக்ஸ்பேக் வைத்திருக்கும் கல்யாண் ராமின் உழைப்பு வீண்போகவில்லை. திரையில் புதுவித நடிப்புடன் மிளிர்கின்றார் மனிதர். கல்யாண் ராமின் இந்த புது வித மாற்றத்திற்கும் அதில் வெற்றி பெற்றதற்கும் இயக்குனர் பூரி ஜெகன்நாத் தான் முக்கிய காரணம். ஜெகபதி பாபுவிடம் சவால் விடும் காட்சிகளிலும் சரி, அதிதியுடனான காதல் காட்சிகளிலும் சரி கல்யாண் ராம் அப்லாஸ் அள்ளுகின்றார்.
அதிலும் கிளைமேக்ஸிற்கு முந்தைய, நீதிமன்ற காட்சிகளில் கல்யாண் ராமின் நடிப்பு குறிப்பிட்டு சொல்லும்படியாக அமைந்துள்ளது. கல்யாண் ராமிற்கு சரியான போட்டியாக நடித்திருப்பவர் ஜெகதி பாபு. படத்தில் வில்லதனம் காட்டினாலும், நாயகனுக்கு நிகரான நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார் ஜெகபதி பாபு.
ஸ்டைலான வில்லனாக திரையில் மிளிரும் ஜெகபதி பாபு, கல்யாண் ராம் கோர்ட் காட்சிகளிலும், கரீம் பேடியுடன் கல்யாண் ராமிற்கான காட்சிகளிலும் கட்சிதமாக வசனங்கள் அமைத்து கவனம் ஈர்க்கின்றார் இயக்குனர் பூரி ஜெகன்நாத். இருப்பினும் திரைக்கதையில் முதல் முடிச்சு அவிழ்ந்த உடன் பிறகாட்சிகள் ரசிகர்கள் யூகிப்பது போல் அமைவது பலவீனம். அழகால் வசீகரிக்கும் அதிதி ஆர்யா நடிப்பில் கவர்ந்திழுக்க தவறிவிட்டார்.
காட்சிகளுக்கு கூடுதல் பொலிவைச் சேர்த்துள்ளார் ஒளிப்பதிவாளர். அனுப் ரூபன்ஸ் இசையில் பாடல்கள் ரசிக்கும்படி அமைந்துள்ளன. பின்னணி இசையும் காட்சிகளுக்கு பொருந்தி ஒலிக்கின்றது. பூரிஜெகன் நாதின் ஆக்ஷன் ஸ்டைலில் உருவாகியிருக்கும் ஐஎஸ்எம் படத்தில் கல்யாண் ராம் தனித்து தெரிகின்றார்.
மொத்தத்தில் ஆக்ஷன் விரும்பிகளுக்கான அக்மார்க் பூரி ஜெகன்நாத் திரைப்படம் ஐஎஸ்எம்