நாயகன் - ராம் கார்த்திக்
நாயகி- காஷ்மீரா குல்கர்னி
இயக்குனர் - ராம்கிருஷ்ண ரெட்டி
திகில் படத்தின் ஜுரம் ஆந்திரா வரை பரவி விட்டது போல, இம்முறை அப்படிப்பட்ட ஜுரத்தில் வெளிவந்திருக்கும் படம் தான் திர்ஷ்யகாவ்யம். எந்த அளவிற்கு பயத்தை ஏற்படுத்துகிறது என்று பார்க்கலாம்.
அகில் மற்றும் அபினயா இருவரும் காதல் திருமணமத்தில் இணைந்தவர்கள், கல்லூரி முதல் காதல் கொண்டு ஒரு நன்நாளில் திருமணமும் செய்து கொள்கின்றனர். அவர்களுக்கு அனன்யா என்றொரு மகளும் இருக்கிறார். எல்லாம் சுமுகமாக நடந்து கொண்டிருக்க. எதிர்பாரா திருப்பம் எற்படுகிறது.
ஒரு நாள் விமான நிலையம் செல்லும் நேரத்தில் அகிலின் கார் விபத்தில் சிக்கிக்கொள்ள அவர் உயிர் இழக்கிறார். இந்த நிகழ்வுகளுக்கு பின்னும் அவர் தனது குடும்பத்தாருடன் அலைபேசியில் பேசுகிறார். அது எப்படி? நிஜமாகவே அவர் இறந்து விட்டாரா? ஆன்மாக்கள் அலைபேசியில் உரையாடுமா? என்பதை சற்றே உணர்வுகளை கலந்து காட்சிகளாக்கியிருக்கிறார்கள்.
அகிலாக ராம் கார்த்திக் அசாதரணமாக கதாபாத்திரத்திற்கு தேவையானவற்றை வெளிப்படுத்துகிறார். மொத்த கதையும் தந்தை - மகளுக்கு இடையேயான உணர்வு பிணைப்பிலேயே சுழல்கிறது. எல்லாரும் அழகாக நடித்திருக்கிறார்கள், அதுவும் அந்த அனன்யா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் குழந்தை அருமையாக நடித்திருக்கிறாள்.
முதல் பாதிமுழுக்க மிதமான வேகத்துடன் செல்லும் திரைக்கதை, இடைவேளை காட்சிகளில் நிமிர்ந்து உட்கார வைக்கிறது. பின்னர் இரண்டாம் பாதியில் தேவையே இல்லாமல் வரும் பாடல்கள் படத்தின் வேகத்தை சட்டென குறைத்து பார்ப்பவர்களின் பொறுமையை சோத்திக்கிறது.
ஒரு திகில் கதைதான் இருந்தாலும், அந்த குழப்பமான கிளைமேக்ஸ் காட்சியை தவிர்த்திருக்கலாம். ஏன் இவ்வளவு குழப்பம் என்று தெரியவில்லை, படத்தின் உன்மையான திகில் அத்தியாயம் இப்பட த்தின் இரண்டாம் பாகத்தில் தான் அவிழ்க்கப்படும் என்று சொல்கிறார்கள்.
அப்படி இருக்கையில் ஏன் இவ்வளவு நிச்சயமில்லாத திடீரென மாறும் திரைக்கதையை கையில் எடுத்தார் என்பது இயக்குனருக்கு மட்டுமே வெளிச்சம்.மொத்தமாக திகில் படவிரும்பியாக இருந்தால் நீங்கள் நிச்சம் ஒரு முறை பார்க்கலாம்.
திர்ஷ்யகாவ்யம் - இரண்டாம் பாகத்திற்கான முன்னோட்டம்