Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

பஜ்ரங்கி பைஜான் (ஹிந்தி)

பஜ்ரங்கி பைஜான் (ஹிந்தி),Bajrangi Bhaijan (Hindi)
  • பஜ்ரங்கி பைஜான் (ஹிந்தி)
  • சல்மான் கான்
  • கரீனா கபூர்
17 ஜூலை, 2015 - 11:34 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » பஜ்ரங்கி பைஜான் (ஹிந்தி)

நடிகர்கள் : சல்மான் கான், கரீனா கபூர், நவாசுதீன் சித்திக்

இயக்கம் : கபீர் கான்

தயாரிப்பு - சல்மான், ராக்லைன் வெங்கடேஷ்


பாடிகார்டு படத்திற்கு பிறகு சல்மான் கானும், கரீனா கபூரும் மீண்டும் இணைந்து நடித்து இந்த ரம்ஜான் விருந்தாக வௌிவந்திருக்கும் படம் பஜ்ரங்கி பைஜான். இந்தப்படம் ரசிகர்களை எந்தளவு கவர்ந்துள்ளது என்று இனி பார்ப்போம்...


பஜ்ரங்கி பைஜான் படத்தின் கதை பாகிஸ்தானில் உள்ள சிறிய கிராமம் ஒன்றில், ஒரு குடும்பம் டிவியில் இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட்டை ரசித்தப்படி ஆரம்பமாகிறது. பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷாகித் அப்ரிதியின் விளையாட்டால் கவரப்பட்ட அந்தகுடும்பம், தனது மகளுக்கு ஷாகிதா(ஹர்ஷாலி மல்கோத்ரா) என்று பெயர் சூட்டுகிறார்கள். நல்ல அழகும், அறிவு நிறைந்த அந்த சிறுமியால் பாவம் பேசமுடியாது. இதனால் ஷாகிதாவை எண்ணி தினமும் அவரது பெற்றோர் கவலைப்படுகிறார்கள். டில்லியில் உள்ள தர்காவிற்கு ஷாகிதாவை அழைத்து செல்லும்படியும், அங்கு சென்றால் நிச்சயம் அவளால் பேச முடியும் என்று பெரியவர்கள் சிலர் அறிவுறுத்துகிறார்கள். பெரியவர்களின் பேச்சை மதித்து ஷாகிதாவின் பெற்றோரும் அவளை அழைத்து டில்லி வருகின்றனர்.


டில்லியில் தர்காவிற்கு எல்லாம் சென்று மீண்டும் பாகிஸ்தானுக்கு ரயிலில் திரும்புகின்றனர். ஒரு இடத்தில் தொழில்நுட்ப கோளாறால் ரயில் நின்று விடுகிறது. அப்போது சிறிய ஆடு ஒன்று பள்ளத்தில் ஒன்றில் சிக்கி வௌியே வர முடியாமல் தவிப்பதை பார்க்கும் ஷாகிதா, அதை மீட்க ரயிலில் இருந்து கீழே இறங்குகிறார். அந்த நேரம் பார்த்து ரயில் கிளம்பிவிட தவிக்கும் ஷாகிதா அடுத்த ரயிலில் ஏறி மீண்டும் டில்லிக்கே திரும்புகிறார். தன் பெற்றோரை இழந்து தவிக்கும் ஷாகிதா, அனுமன் பக்தரான ஹீரோ பவன் குமார் சதுர்வேதி கண்ணில் சிக்குகிறார். வாய் பேச முடியாமல், பெற்றோரை இழந்து தவிக்கும் ஷாகிதாவை அழைத்து கொண்டு தன் மனைவியான ரஷிகாவிடம் (கரீனா கபூர்) அழைத்து செல்கிறார்.


தன் வீட்டில் அன்பு பாராட்டி வளர்க்கும் ஷாகிதாவை அவரது பெற்றோரிடம் ஒப்படைக்க இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் புறப்படுகிறார். ஷாகிதாவை அவரது பெற்றோரிடம் சல்மான் கான் ஒப்படைத்தாரா.? இல்லை தன்னுடனேயே தனது மகளாக வளர்க்கிறாரா.? எனும் கேள்விக்கு விறுவிறுப்பாகவும், உணர்வுப்பூர்வமாகவும் விடையளிக்கிறது பஜ்ரங்கி பைஜான் படத்தின் மீதிக்கதை.


சல்மான் கான் அவ்வளவு அருமையாக நடித்திருக்கிறார். இதுவரை சல்மான் கானை இப்படியொரு ரோலிலும், நடிப்பிலும் பார்த்ததில்லை என்று ரசிகர்களை வாவ் சொல்ல வைக்கிறார்.


கரீனாவுக்கு பெரிய ரோல் இல்லை என்றாலும் தனக்கு கொடுக்கப்பட்ட ரோலை சரியாக செய்திருக்கிறார்.


சல்மானை போன்றே நவாசுதீன் சித்திக்கின் நடிப்பும் பிரமாதம். குறிப்பாக இடைவேளைக்கு பிறகு அவரது ரோல் மிரட்டுகிறது.


சிறுமி ஹர்ஷாலி மல்கோத்ராவுக்கு எதிர்காலத்தில் சினிமாவில் நல்ல வாய்ப்பு இருக்கிறது என்று சொல்லாமல் சொல்ல வைத்துவிட்டார்.


படத்திற்கு உயிர் நாடியே கபீர் கானின் இயக்கம் தான். எவ்வளவு அழகாக ஒவ்வொரு கேரக்டரையும் வௌி கொண்டு வந்திருக்கிறார். படத்தில் ஒவ்வொரு கேரக்டரையும் அவர் அறிமுகம் செய்யும் இடம் அவ்வளவு அருமை. குறிப்பாக நவாசுதீன் சித்திக் மற்றும் ஓம் புரி ஆகியோரின் ரோலுக்கு சிறப்பு கவனம் செலுத்தியிருக்கிறார். படத்தின் ஒவ்வொரு காட்சியும் அவ்வளவு உணர்வுப்பூர்வமாக படமாக்கியருக்கிறார் இயக்குநர் கபீர் கான்.


செல்பி லீ லீ, து சையா, போன்ற பாடல்கள் கதை முன் நகர்த்தி செல்கிறது. ஆசீம் மிஸ்ராவின் ஔிப்பதிவு பிரமாதம்.


மனதை தொடும் கதை, ஹர்சாலி மல்கோத்ராவின் அழகிய நடிப்பு, பிரமிக்க வைக்கும் காட்சியமைப்பு உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகள் பஜ்ரங்கி பைஜான் படத்தை பார்க்க தூண்டுகிறது.

மொத்தத்தில், பஜ்ரங்கி பைஜான் - ரசிகர்களின் மனதை தொடுவான்!

ரேட்டிங் - 3/5



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in