Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம்

புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம்,Puriyatha Anandham Puthithaga Arambam
  • புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம்
  • கிரிஷ்
  • இயக்குனர்: தம்பி சைய்யது இப்றாகிம்
17 ஜூன், 2015 - 11:41 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம்

தினமலர் விமர்சனம்


நடிகை "உயிர்" சங்கீதாவின் கணவரும், பிரபல பின்னணி பாடகருமான கிரிஷ் கதாநாயகராக அறிமுகமாகியிருக்கும் திரைப்படம் தான் இராவுத்தர் பிலிம்ஸ் அ.செ.இப்றாகிம் ராவுத்தர் தயாரிப்பில் வந்திருக்கும் "புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம்".


மதுரையில் நண்பர்களுடன் அறை எடுத்து தங்கி தனியார் நிறுவனம் ஒன்றில் கைநிறைய சம்பளத்துடன் வேலைபார்க்கும் கிரிஷூக்கு., மூன்றாண்டுகளுக்கு மேலாக, பஸ் ஸ்டாண்டில் பார்க்கும் கல்லூரிமாணவி சிருஷ்டி டாங்கே மீது காதல் என்றால் காதல் அப்படி ஒரு காதல்!. ஆனாலும், அறை சிநேகிதர்கள், ரயில் சிநேகிதர்களிடமெல்லாம் தன் காதலை அவர்கள் கேட்டாலும் கேட்காவிட்டாலும் சொல்லி உருகும் கிரிஷ், காதலியிடம் பார்வையால் பேசுவதோடு மட்டும் சரி! காதலியும் அவ்வாறே அமைதி காக்க., கடைசியில் காதலி, கிரிஷின் ரயில் சிநேகிதரின் கண்ணுக்கு கண்ணான உறவுபெண்!


இதுதெரியாமல், ஊரெல்லாம் அலைந்து திரிகிறார் கிரிஷ். சிருஷ்டிக்கு வேறு இடத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டு நடந்தும் முடிகிறது. அதையும் தாண்டி, சிருஷ்டியும், கிரிஷூம் க்ளைமாக்ஸில் ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா...? என்பதை புரியாத பாணியில் புதிதாக சொல்லி இருக்கிறார் இயக்குநர். அது புரியாத ஆனந்தமாக புதிதாக ஆரம்பமாகியிருக்கிறதா...? எனக்கேட்டால் அதுதான் இல்லை பாவம்!


கிரிஷ், மீசையை மழித்துக்கொண்டு சின்னப்பையன் தோற்றத்தில் துள்ளலும், துடிப்புமாக படம் முழுக்க பள்ளி மாணவன் ரேஞ்சில் பஸ்சில் தொற்றிக்கொண்டும் பஸ் ஸ்டாண்டில், நின்றுகொண்டு பார்வையாலேயே காதல்ரசம் சொட்டுகிறார். அவர் பண்ணும் காதல், நடிகை சங்கீதாவிற்கு வேண்டுமானால் பிடிக்கும். ரசிகர்களுக்கு..?!.


சிருஷ்டி டாங்கே, முந்தைய படங்களை காட்டிலும் நடிப்பில் முதிர்ச்சி காட்டியிருக்கிறார். முகத்திலும் முதிர்ச்சி தெரிவது பலவீனம்!. இரயில் சிநேகிதராக சிருஷ்டியின் அக்கா புருஷனாக வரும் கார்த்திக், கிரிஷின் அறைநண்பர் பழனி உள்ளிட்டவர்கள் கொஞ்சம் ஓவர் ஆக்டிங் என்றாலும் அவர்கள்தான் ரசிகர்களுக்கு ஆறுதல்!.


ரைஹானாவின் இசை, செந்தில்மாறன்.ஆரின் ஒளிப்பதிவு, ராஜாமுகமதுவின் படத்தொகுப்பு எல்லாம் இருக்கிறது. ஆனாலும், தம்பி செய்யது இப்ராகிமின் எழுத்து இயக்கத்தில் இந்த செல்ஃபோன் யுகத்திலும், கையில் லவ்லெட்டரை வைத்துக்கொண்டு தயங்கும் நாயகன், மூன்றாண்டுகளாய் நாயகன் சொல்லாத காதலை, நாயகியும் சொல்லாது தவிப்பது உள்ளிட்ட இழுவை காட்சிகளால், கலாச்சாரங்களால் புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம் படமும் புரியாமலேயே போகிறது, புதிதாகவும் இல்லாமல் இருக்கிறது! சாரி கிரிஷ்!!.



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in