Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

கெளரவம்

கெளரவம்,Gouravam
30 ஏப், 2013 - 12:38 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » கெளரவம்

    

தினமலர் விமர்சனம்


“அழகியதீயே’மொழி’ அபியும்நானும்’ உள்ளிட்ட வெற்றி திரைக்காவியங்களை தந்த இயக்குனர் ராதா மோகன் - தயாரிப்பாளர் பிரகாஷ்ராஜ் கூட்டணியில் புதிய திரைப்படம் தான் கௌரவம்’. கலை படமாகவும் இல்லாமல் கமர்ஷியல் படமாகவும் இல்லாமல் டாக்குமெண்ட்டரி படங்கள் டைப்பில் தற்போது தமிழகத்தில் இல்லாத ஜாதியத்தையும் இரட்டை டம்ளர் முறைகளைப் பற்றியும் பேசும் “கௌரவம்’ 1970-80களில் வெளிவந்திருந்தால் மேற்படி ராதா மோகன் - பிரகாஷ் ராஜ் கூட்டணிக்கு கௌரவமாக இருந்திருக்கும்.

கதைப்படி. சென்னைவாசியான இளம் ஹீரோ அல்லு சிரீஷ் ஏதோ வேலை விஷயமாக டி.வெண்ணூர் கிராமத்தை காரில் கடக்கும்போது, அவருக்கு தன்னுடன் இன்ஜினியரிங் படித்த சண்முகத்தின் ஞாபகம் வருகிறது. தாழ்த்தப்பட்ட இனத்தை சார்ந்த சண்முகத்திற்கு டி.வெண்ணூர் தான் சொந்த ஊர் என்பதால் நண்பனைத்தேடி அந்த ஊருக்குள் போகிறார். அங்கு நண்பனின் ஒன்றுவிட்ட அண்ணன் குமரவேல், சண்முகம் ஊர் பெரியவரின் மகளை இழுத்துக் கொண்டு ஓடிப் போய்விட்டதாக கூறி அல்லு கிரீஷை சண்முகத்தின் வயசாளியும், நோயாளியுமான அப்பாவிடம் அழைத்து போகிறார். அவரோ அல்லு சிரீஷின் கையை பற்றிக்கொண்டு, ஊர் பெரியவரும், உயர் ஜாதிக்காரருமான பசுபதி ஐயாவின் மகளை இழுத்துக் கொண்டு சண்முகம் ஓடிப்போய்விட்ட பிறகு என்னை கூப்பிட்டு அனுப்பிய பசுபதி ஐயா, இன்று முதல் எனக்கு அவள் மகளும் அல்ல, உனக்கு அவன் மகனும் அல்ல... என்று சத்தியம் செய்துவிட்டு வேறு வேலையை பார்ப்போம் என்றார். அதுமுதல், பெரிய மனுஷன் அவர் சொல்படி கேட்டு உயிரை கையில் பிடித்துக் கொண்டு வாழ்ந்து வருகிறேன்.., என்றாலும் அவ்வப்போது பிள்ளை நினைப்பு, வாட்டி வதைக்கிறது... நீதான் தம்பி என் பிள்ளையை தேடி கண்டுபிடித்து தரணும்.... என்கிறார்.

அல்லுசிரீஷ் சென்னை திரும்பி தன் நண்பனை கூட்டிக் கொண்டு மீண்டும் டி.வெண்ணூர் போகிறார். அங்கு கம்யூனிசவாதி நாசரின் மகளும் இளம் வக்கீலுமான கதாநாயகி யாமி கௌதமின் துணையுடன் சண்முகம் ஜோடியை தேடும் படலத்தில் குதிக்கிறார். பசுபதி ஐயாவின் மகனாலும், ஓடிப்போன பெண்ணின் கணவராக காத்திருந்த முறை மாமன் மற்றும் உள்ளூர் போலீஸாலும் மிரட்டல்களுக்கு உள்ளாகிறார். அப்புறம்? அப்புறமென்ன?... சண்முகத்துடனும் தன்னுடனும் படித்த ஒட்டுமொத்த இன்ஜினியர்களையும் அந்த ஊருக்கு வரவழைத்து மீடியாக்களின் உதவியுடன் போராட்டம் நடத்துகிறார். ஒரு கட்டத்தில் பசுபதி ஐயா குடும்பத்தாரால் சண்முகம் ஜோடி கவுரவ கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வருகிறது. விழுவாரா ஹீரோ? வில்லன்களை பொளந்து கட்டுகிறார். பசுபதியின் மகனை கூண்டில் ஏற்றுகிறார். பசுபதி ஐயா தற்கொலை செய்து கொள்கிறார். நாசரின் மகளும் நாயகியுமான இளம் பெண் வக்கீலுமான யாமி கௌதமுடன் இடையிடையே டூயட் பாடி இறுதியில் ஹீரோ தன் காதலை சொல்கிறார். ஜாதி வெறியால் ஒரு காதல் மடிந்த இடத்தில் ஓர் புதிய காதல் உதயமாகிறது. இதுதான் “கௌரவம்’ படத்தின் மொத்த கதையும் இந்த கதையை எத்தனை மெதுவாகவும் மெருகின்றியும் எடுக்கமுடியுமோ அத்தனை வெறுப்பேற்றும்படியும் விறுவிறுப்பின்றியும் இயக்கியிருக்கிறார் ராதாமோகன்! படத்தின் பல காட்சிகள் இது ராதாமோகன் படமா? சாதா மோகன் படமா? என்றே கேட்க தூண்டும் விதத்தில் இருப்பது பலவீனம்.

கதாநாயகர் அல்லு சிரீஷ்., நாயகி யாமி கௌதம் இருவர் நடிப்பில் நாயகி யாமி முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுவிடுகிறார் என்றால், நாயகர் மூன்றாம் வகுப்பில் கூட தேறமறுத்து நம்மை தேற்ற மறுக்கிறார். பசுபதி ஐயாவாக பிரகாஷ்ராஜ், அவரது மனைவி, மகன், வளர்ப்பு மகன்., ஓடிப்போன பெண்ணின் முறைமாமன் எல்லோருமே பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர். பலே! பலே!

விஜியின் வசனங்களும், எஸ்.எஸ். தமனின் இசையும் கௌரவம் படத்திற்கு பலம் சேர்த்திருக்கின்றன என்றால் ப்ரீதாவின் ஒளிப்பதிவு பலவீனத்தை கூட்டியிருக்கிறது.
ராதாமோகன் - பிரகாஷ்ராஜ் கூட்டணி தமிழகத்தில் இப்பொழு இல்லாத ஜாதி கொடுமைகளை ஒழிக்கிறேன் பேர்வழி என தங்களுக்கென நிரந்தரமாக நிரம்பியிருந்த ரசிகர்கள் கூட்டத்தை ஒழித்து கட்டியிருப்பதைதான் கௌரவ கொலை என குறிப்பிட வேண்டும்!

 கௌரவம்’ - சாதாரணம்"!


-------------------------------------------------------------------


குமுதம் சினிமா விமர்சனம்


ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்த நண்பனைத் தேடி அவனுடைய கிராமத்துக்கு வருகிறான் கதாநாயகன். நண்பன், உயர்த்தப்பட்ட ஜாதிப் பெண்ணைக் காதலித்து ஊரைவிட்டு ஓடியதாகத் தெரிகிறது. அவர்களைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை. நண்பர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து தேடுகிறார்கள். நண்பனும் அவன் காதலியும் “கௌரவக் கொலை’ செய்யப்பட்டதைக் கண்டுபிடிக்கிறார்கள்!

மொழி, அபியும் நானும் போன்ற ராதாமோகனின் படங்களைப் பார்த்துவிட்டுச் சென்றால் ஏமாற்றமாகத்தான் இருக்கும்.

கதாநாயகன் சிரீஷ், பழைய வில்லன் நடிகர் ஆனந்தராஜின் தூரத்துச் சொந்தக்காரப் பையன் போல் இருக்கிறார்! நகரத்திலிருந்து வந்த இளைஞன் வேடத்துக்குப் பொருந்துகிறார்.

ஹீரோயின் யாமி பளிச். தமன்னாவுக்கு மாற்று! நடிப்பு, காதல், நடனம் எல்லாம் வருகிறது.

ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்ட பையன் நன்றாக ஓவியம் வரைகிறான் என்று சொல்லும்போதே, நடந்த கொலையை அவன் வரைந்திருப்பான் என்று சுலபமாகப் புரிந்து விடுகிறது.

விஜியின் வசனம் படத்துக்கு ப்ளஸ் பாயிண்ட். தம்பி, இந்த ஊர்ல நாலு பக்கமும் சுடுகாடு போன்றவை தகிக்கின்றன.

பிரகாஷ்ராஜும், குமாரவேலும் வழக்கம்போல் ஸ்கோர் செய்கிறார்கள்.

கொலைகளைச் செய்தவர்கள் ஏதோ நல்லவர்கள் போலவும், தெரியாமல் உணர்ச்சிவசப்பட்டு செய்து விட்டார்கள் என்றும் காட்டியிருப்பது ஏற்கும்படியாகவா இருக்கிறது?

சொல்ல வந்ததைச் சொல்ல முடியாமல் திணறியிருக்கிறார்.

குமுதம் ரேட்டிங் - ஓகே



வாசகர் கருத்து (6)

sabari dubai - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
29 ஏப், 2013 - 23:22 Report Abuse
sabari dubai ராதாமோகன் இயக்கிய அபியும் நானும் மற்ற ராதாமோகனின் படங்களையும் பார்க்காதவங்க வருத்தப்படனும், இந்த மாதிரி படத்தை இயக்கியதற்கு ராதாமோகனும் படத்தை தயாரித்த தனக்கென்று தமிழகத்தில் தனி இடம் பிடித்த பிரகாஷ்ராஜும் வருத்தபடனும்..இயக்குனருக்கு கதை பஞ்சம் ...கெளரவம் இழந்தார் தயாரிப்பளர் ...சபரி துபாய்
Rate this:
Tamilkumaran - Chennai,இந்தியா
29 ஏப், 2013 - 08:49 Report Abuse
Tamilkumaran தமிழ் நாட்டில் நடப்பதை உண்மையாக சொல்லும் இயக்குனரை பாராட்ட வேண்டும், மற்றபடி சினிமா சுவாரசியமாக இல்லை என்பதற்காக சாதி பிரச்சினைகள், இப்போது நாட்டி இல்லை என்பது பொய்.
Rate this:
KKsamy - Jurong,சிங்கப்பூர்
23 ஏப், 2013 - 08:50 Report Abuse
KKsamy விமர்சகர் ஏதும் அம்னிசியா நோயாள பாதிக்கப்பட்டு இருக்க போறாரு நல்லா பார்த்துக்குங்க அப்பு. சென்னை யை தாண்டியும் தமிழ்நாடு இருக்கு அங்கேல்லாம் நிறைய சாதி பிரச்சனைகள் இருக்கு அப்பு. சமீபத்துல தருமபுரி இதுபோல பிரச்சனையில பத்திக்கிட்டு எரிஞ்சிததே மறந்து போச்சா. படம் நல்லா இல்லையின நல்லா இல்லையின்னு சொல்லு
Rate this:
itashokkumar - Trichy,இந்தியா
21 ஏப், 2013 - 13:11 Report Abuse
itashokkumar ஒரு பெண்ணுக்கு தனக்கு பார்க்கும் மாப்பிள்ளை பிடிக்கவில்லையானால் அதை சொல்லும் உரிமை இருக்கிறது. அதை போலவே ஆணுக்கும். ஆனால் என்னவோ இவனை திருமணம் செய்து கொண்டால் இவன் கீழேயே விடாமல் தூக்கி வைத்து கொள்வான் என்பது போலவும் , உடனடியாக தாஜ்மஹாலுக்கு அழைத்து சென்று அமரவைத்து போட்டோ எடுப்பான் என்பது போலவும் வேட்டை விட்டு ஓடி பெற்றவர்களை வெறுத்து எவனோ ஒருவனை கைபிடிப்பதனால் கிடைப்பதென்ன. ஒரு பழைய பாயில் (புது பாய் வாங்க ஏது நேரம்) கிடைக்கும் ஆன் சுகமா? அல்லது இருவரும் சேர்ந்து கண்டுபிடிக்க போகும் உலகத்துக்கே பயன்பட போகும் புது கண்டுபிடிப்பா. ஒன்றுமே இல்லை. தகுதி உள்ளவன் என்றால் பெற்றோரிடமே கேட்டு செய்து கொள்ளலாமே. தகுதி இல்லாதவனை ஒரு பெண் விரும்புவதும் அதை பெற்றோர் விரும்பாதுமே முதல் காரணம். மற்றபடி ஜாதி எல்லாம் நாலாவதாக வரும் பிரச்சினையே. தமிழ் சினிமா காதல் கருமாதி காதலனும் காதலியும் தொடை மார்பு தெரிய ஆடுவதை விட போவதில்லை வேறு கதைகளும் வேறு விசயங்களையும் தெரியபடுத்த போவதில்லை. சிங்கப்பூரில் படம் எடுத்தாலும் அமெரிக்காவில் படம் எடுத்தாலும் அதன் சிறப்பை சொல்வதற்கு பதில் பெண்களின் அவயங்களில் பெயிண்ட் அடித்து விட்டு ரோட்டில் குத்தாட்டம் ஆடுவதுதான் குறிக்கோள்.
Rate this:
ramar - madurai,இந்தியா
21 ஏப், 2013 - 00:13 Report Abuse
ramar படத்தின் கதைய படிக்கவே கஷ்டமா இருக்கு.எப்டி பாத்திங்க
Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
தொடர்புடைய படங்கள்

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in