டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
கடந்த ஆகஸ்ட் மாதம் முதல்முறையாக ஒடிடி தளத்தில் பிக்பாஸ் (ஹிந்தி) நிகழ்ச்சி துவங்கப்பட்டது. கடந்த ஆகஸ்ட்-8ல் துவங்கிய இந்த ஒடிடி பிக்பாஸ் சீசன் செப்-18 அன்று நிறைவு பெற்றது. மொத்தம் 42 நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 13 போட்டியாளர்களில் திவ்யா அகர்வால் டைட்டில் வின்னராக வெற்றி பெற்றார். பிரபல பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹர் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
இதே திவ்யா அகர்வால் தான், பிக்பாஸ் நிகழ்ச்சியின்போது சக போட்டியாளர்கள் சிலருடன் மோதல் போக்கை கடைபிடித்தார் என்று கரண் ஜோஹரிடம் அவ்வப்போது குட்டுக்கள் வாங்கினார். இந்தநிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் நீங்கள் கரண் ஜோஹரை கோபப்படுத்தியதால் அவரது பட வாய்ப்பு உங்களுக்கு கிடைக்காது என நினைக்கிறீர்களா என கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த திவ்யா அகர்வால், “எனது வேலை சரியாக இருக்கும் பட்சத்தில் கரண் ஜோஹர் படத்தில் நடித்துதான் எனது திறமையை நிரூபிக்க வேண்டும் என்கிற அவசியமில்லை” என அதிரடியாக கூறினார். பின்னர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை, சட்டென்று, “நான் கல்லூரியில் படிக்கும் காலங்களில் கரண் ஜோஹரின் படங்களாக தேடிப்பிடித்து பார்ப்பேன்” என அவருக்கு ஐஸ் வைக்கவும் செய்தார்.