'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
"ஓம் சாந்தி ஓம், சாந்தினி சவுக் டூ சீனா, காக்டெயில் என, பாலிவுட் பியூட்டி, தீபிகாவின் திரையுலக வெற்றிப் பயணம் தொடர்கிறது. "சென்னை எக்ஸ்பிரஸ், ரேஸ்-3, கோச்சடையான் என, இப்போதும், காலில் ரெக்கை கட்டி பறந்து கொண்டிருக்கும் தீபீகாவை நிறுத்தி,"கவர்ச்சியான வேடங்களிலேயே, அதிகம் நடிப்பதாக, உங்கள் மீது, குற்றச்சாட்டு உள்ளதே என, கேட்டால், தன் அழகான விழிகளை, அங்குமிங்கும் உருட்டி, முறைக்கிறார். "இப்படி வேறு, பீதியை கிளப்புகிறார்களா. ஏற்கனவே, எனக்கு சரியாக இந்தி பேசத் தெரியவில்லை என, புகார் கூறினர். நான், தென் மாநிலத்திலிருந்து வந்தவள். இந்தியில் சரளமாக பேசுவதற்கு, சிறிது காலம் பிடித்தது. இது ஒரு குற்றமா என, கேள்வி எழுப்பியவர், "கவர்ச்சியாக நடிப்பதாக என் மீது புகார் கூறுவோரிடம், ஒன்றை கூற விரும்புகிறேன். கவர்ச்சியாக நடிப்பது, அவ்வளவு எளிதான விஷயம் இல்லை. சீரியசான கேரக்டர்களில் கூட, கண்களில், கிளிசரினை தேய்த்துக் கொண்டு, மாய்ந்து, மாய்ந்து அழலாம். ஆனால், கவர்ச்சியாக நடிப்பது, ரொம்ப கஷ்டமான காரியம். அதையெல்லாம், அனுபவித்து பார்த்தால் தான் தெரியும் என, பொருமித் தீர்த்தார்.