ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஹிந்தி சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அமீர் கான். லகான், தங்கல், பிகே என இவர் நடிக்கும் படங்களுக்கு மொழியை கடந்து ரசிகர்கள் ஏராளம். ரீனா தத்தை முதலில் திருமணம் செய்து கொண்டார் நடிகர் அமீர் கான். இந்த தம்பதிக்கு ஐரா கான், ஜூனைத் என்ற இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில் இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர்.
பின்னர் 2005-ம் ஆண்டு கிரண் ராவை அமீர் கான் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். இந்நிலையில் இன்று அமீர் கான் - கிரண் ராவ் கூட்டாக வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது : 15 ஆண்டுகாலம் மகிழ்ச்சியான தம்பதியாக வாழ்ந்தோம். ஆனால் நாங்கள் இருவருமே தனித்தனியாக புதிய வாழ்க்கைக்குள் நுழைகிறோம். இனி நாங்கள் கணவன் மனைவி அல்ல. பெற்றோர் மட்டுமே... இந்த முடிவை சில காலத்துக்கு முன்பே எடுத்துவிட்டோம். ஆனால் சில நடைமுறைகளால் அறிவிக்க தாமதம் ஆனது.
நாங்கள் இருவரும் மண வாழ்க்கையில் பிரிந்தாலும் தொடர்ந்து திரைத்துறையிலும், சமூகசேவையிலும், எங்கள் குழந்தையை வளர்ப்பதிலும் இணைந்தே செயல்படுவோம். விவாகரத்து என்பது முடிவு அல்ல. அது இன்னொரு புதிய வாழ்க்கைக்கான தொடக்கம். எங்கள் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் நன்றியை கூறிக்கொள்கிறோம்'. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.