இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
நீர்ப்பறவை படத்தில் கிறிஸ்தவ பெண்ணாக நடித்தவர் சுனைனா. இப்படத்துக்கு சற்று முன்புதான் பரத்துடன் படுகவர்ச்சியாக சுனைனா நடித்த திருத்தணி படம் வெளியானது. அதைப்பார்த்து மேலும் சில கமர்சியல் படாதிபதிகள் சுனைனாவை மேலும் தோலுரிக்கும் நோக்கத்துடன் அணுகினர். ஆனால் டைட்டீல் கார்டு தொடங்கி என்ட் கார்டை வரைக்கும் ஒரு டயலாக் விடாமல் கதைகளைக்கேட்ட சுனைனா, சொல்லி அனுப்புகிறேன் என்று படாதிபதிகளை அனுப்பி வைத்தவர்தானாம். அதன்பிறகு எந்த பதிலும் அவரிடமிருந்து வரவில்லையாம்.
இதையடுத்து, என்னாச்சு அம்மணி? ஒரு பதிலையும் காணோமே? என்று கேட்டவர்களிடம், நீர்ப்பறவை படத்தில் நடித்தபிறகு என் மீது நல்ல நடிகை என்றொரு முத்திரை விழுந்திருக்கிறது.எனது இமேஜை நல்ல நடிகையாக மாற்றி விட்டார் சீனுராமசாமி. அதனால் இனிமேல் இருக்கிற கொஞ்சநஞ்ச காலமும் இதுமாதிரி தெறமைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே ஆக்டு கொடுக்க ஆசைப்படுறேன் என்று டபாய்த்து விட்டாராம் நடிகை. இதனால் சுனைனாவை நம்பி மோசம்போன படாதிபதிகள் இப்போது வேறு நடிகைகளை தேடிச்சென்று கொண்டிருக்கின்றனர்.