தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
"டைட்டானிக் படத்தில்,"ரோஸ் என்ற கேரக்டராகவே மாறி, உலகம் முழுவதும் உள்ள, சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர், கேத் வின்ஸ்லெட். அதற்கு பின், "ரீடர் என்ற படத்தில், தன் அற்புதமான நடிப்புக்காக, ஆஸ்கர் விருது பெற்றார். தற்போது, இவருக்கு, மேலும் ஒரு கவுரவம் கிடைத்துள்ளது. பிரிட்டிஷ் ராணி எலிசபெத் கையில், பிரிட்டனின் சிறந்த நடிகை என்ற விருதை, அவர் பெற்றுள்ளார். இதற்கான விழா, சமீபத்தில், பக்கிங்காம் அரண்மனையில் நடந்தது. கேத் கூறும்போது, "பிரிட்டிஷ் ராணியை சந்திக்க வேண்டும் என்பது, என்னுடைய கனவு. இந்த கனவு, இவ்வளவு விரைவில் நனவாகும் என, நினைத்துக் கூட பார்க்கவில்லை. விருது வழங்கியபோது, ராணி எனக்கு பாராட்டு தெரிவித்தார். இதற்கு முன், பல விருதுகளை வாங்கி இருந்தாலும், இந்த விருது, எனக்கு ரொம்ப ஸ்பெஷலாக அமைந்து விட்டது என, சிலிர்ப்புடன் பதில் அளிக்கிறார், கேத் வின்ஸ்லெட்.