தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கொரோனா முதல் அலை வீசும்போது நடிகர்கள் பணமாக நிதி கொடுத்தபோதும் களத்தில் இறங்கி பல நடிகைகள் பணியாற்றினர். அதேபோன்று இப்போது இரண்டாவது அலையிலும் நடிகைகள் களத்தில் இறங்கி இருக்கிறார்கள்.
பாலிவுட்டில் நடிகை ஜாக்குலின் பெர்ணான்டஸ் கொரோனா 2வது அலை காலத்தில் பசியோடு இருக்கும் மக்களுக்கு உணவளிப்பதற்காக ஒரு அறக்கட்டளை ஒன்றை தொடங்கி உள்ளார். இந்த அறக்கட்டளையில் மும்பை முன்னாள் போலீஸ் கமிஷனர் சிவானந்தன் மற்றும் ரோடி வங்கியும் இணைந்துள்ளது. இந்த அறக்கட்டளை மூலம் இதுவரை ஒரு கோடி பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது. ஜாக்குலின் பெர்ணாண்டஸ் நேரடியாகவே உணவு வழங்கி வருகிறார்.
இதேபோல ஏற்கெனவே கர்நாடக மாநிலத்தில் நடிகை பிரணிதி பணியை தொடங்கி விட்டார். தற்போது நடிகை சஞ்சனா கல்ராணியும் பொதுமக்களுக்கு உணவளிக்கும் பணியை தொடங்கி விட்டார். தினமும் 600 பேருக்கு உணவளிக்கும் வகையில் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறார். சஞ்சனா கல்ராணி போதை பொருள் கடத்தில் வழக்கில் கைது செய்யப்பட்டு 3 மாத சிறைவாசத்திற்கு பிறகு சமீபத்தில்தான் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார், என்பது குறிப்பிடத்தக்கது.