டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
திருமணம் என்பது வேடிக்கைக்காக ஏற்பட்டது அல்ல, என்று நடிகை ராணிமுகர்ஜி கூறியுள்ளார். இந்திய சினிமாவின் வித்தியாசமான நட்சத்திரம் என்ற பெயரை பெற்றவர் நடிகை ராணி முகர்ஜி. வழக்கமான சினிமா ஹீரோயின்கள் போல விருந்துகளில் அதிகமாக அவரைப் பார்க்க முடியாது. தேவையில்லாமல் பேட்டிகள் கொடுப்பதில்லை. ஆனாலும், பத்திரிகைகளில் பரபரப்பாக அடிபடுபவர். ஏறத்தாழ 50 படங்களில் நடித்துவிட்டார். அதில் பாதிக்கு மேற்பட்ட படங்கள் வெற்றிப் படங்கள் அல்லது பாராட்டையும் விருதுகளையும் அள்ளிக் குவித்த படங்கள்.
திருமணம் குறித்து அவர் அளித்துள்ள பேட்டியொன்றில், என்னுடைய திருமணம் பலருக்கு வேடிக்கையாகத் தெரிகிறது. ஆள் ஆளுக்கு இஷ்டத்திற்குக் கதை கட்டுகிறார்கள். என்ன செய்வது, சினிமா போன்ற ஒரு தொழிலில் ஈடுபட்டால் நம்மைப் பற்றி என்ன வேண்டுமானாலும் எழுதவும் பேசவும் மற்றவர்களுக்கு உரிமை வந்துவிடுகிறது. இது தவிர்க்க முடியாதது. என்னைப் பொறுத்தவரை திருமணம் என்பது வேடிக்கைக்காக ஏற்பட்டது அல்ல. மிகவும் கவனமாகவும் தீர யோசித்தும் முடிவு செய்ய வேண்டிய ஒன்று. உலகத்திற்கு வரும் எல்லா உயிர்களும் ஜோடி ஜோடியாகத்தான் வருவதாகச் சொல்வார்கள். எனக்காக எங்கேயோ ஒருவர் இல்லாமலா இருப்பார்? அவர் வரும்வரை நான் தனிமையை ரசிக்கிறேன். மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைப் பற்றியெல்லாம் கவலைப்பட நான் தயாராக இல்லை, என்று கூறியிருக்கிறார்.