தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நடிகர்கள் குரங்குகளைப் போல் மாறி வருகின்றனர் என்று பாலிவுட் நடிகை கரீனா கபூர் கூறியுள்ளார். மனதில் தோன்றுவதை சற்றும் யோசிக்காமல் பட்டென்று போட்டு உடைப்பவர்களில் கரீனா கபூரும் ஒருவர். அவ்வப்போது இப்படி பட்டென்று பேசி சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார். சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டியொன்றில், நடிகர்களின் விளம்பர யுத்தி குறித்து கூறியிருக்கிறார். அவர் தனது பேட்டியில், நடிகர்கள் தற்போது குரங்குகளைப் போல் மாறி வருகின்றனர். உயரமான கட்டிடங்களில் இருந்து தங்கள் படங்கள் பற்றி விளம்பரம் என்ற பெயரில் அலறுகின்றனர். தபாங் 2 படம் நன்றாக வந்துள்ளது. அதை விளம்பரம் செய்தாலும், செய்யாவிட்டாலும் மக்கள் நிச்சயம் பார்ப்பார்கள். பிரகாஷ் ஜாவின் சத்யாகிரஹா படத்தில் பத்திரிக்கையாளராக வருகிறேன். ஆனால் அதில் யாருடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து கேள்வி கேட்கமாட்டேன். அமீர் கானுடன் நான் நடித்துள்ள தலாஷ் படம் விரைவில் ரிலீஸ் ஆகிறது. அந்த படத்தை விளம்பரம் செய்யும் எண்ணம் இல்லை, என்று கூறியுள்ளார்.