தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
"சயீப் அலிகானை திருமணம் செய்து கொண்ட பின், நடிப்புக்கு முழுக்கு போட்டு விட்டு பாலிவுட்டுக்கு டாட்டா காட்டப் போகிறார், கரீனா என, வெளியாகும் தகவலால் தூக்கம் இழந்து தவிக்கிறார் கரீனா கபூர். இதுபற்றி அவரிடம் கேட்டால், கோபத்தில்
ஜிவு ஜிவு என சிவக்கிறது அவரது முகம். "என் மீது யாரோ, கொலைவெறியோடு அலைகிறார்கள் என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது. எங்கள் குடும்பமே நடிப்பு பாரம்பரியமிக்க குடும்பம். இந்த பெருமையை தக்க வைத்துக் கொள்ள
வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். சினிமா என் ரத்தத்தில் கலந்த விஷயம்.
அதை யாராலும் பிரிக்க முடியாது. நடிப்புக்கு தான் முன்னுரிமை கொடுப்பேன். மற்ற விஷயங்கள் எல்லாம் அப்புறம் தான் என, பட படவென, பட்டாசாக வெடித்து தள்ளினார்.
கரீனா குறிப்பிட்ட மற்ற விஷயங்கள் என்ன என்பது தெரியாமல், மண்டை காய்ந்து போய் அலைகிறது பாலிவுட்டின் கிசு கிசு கும்பல்.