பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
"சயீப் அலிகானை திருமணம் செய்து கொண்ட பின், நடிப்புக்கு முழுக்கு போட்டு விட்டு பாலிவுட்டுக்கு டாட்டா காட்டப் போகிறார், கரீனா என, வெளியாகும் தகவலால் தூக்கம் இழந்து தவிக்கிறார் கரீனா கபூர். இதுபற்றி அவரிடம் கேட்டால், கோபத்தில்
ஜிவு ஜிவு என சிவக்கிறது அவரது முகம். "என் மீது யாரோ, கொலைவெறியோடு அலைகிறார்கள் என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது. எங்கள் குடும்பமே நடிப்பு பாரம்பரியமிக்க குடும்பம். இந்த பெருமையை தக்க வைத்துக் கொள்ள
வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். சினிமா என் ரத்தத்தில் கலந்த விஷயம்.
அதை யாராலும் பிரிக்க முடியாது. நடிப்புக்கு தான் முன்னுரிமை கொடுப்பேன். மற்ற விஷயங்கள் எல்லாம் அப்புறம் தான் என, பட படவென, பட்டாசாக வெடித்து தள்ளினார்.
கரீனா குறிப்பிட்ட மற்ற விஷயங்கள் என்ன என்பது தெரியாமல், மண்டை காய்ந்து போய் அலைகிறது பாலிவுட்டின் கிசு கிசு கும்பல்.