ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
"சயீப் அலிகானை திருமணம் செய்து கொண்ட பின், நடிப்புக்கு முழுக்கு போட்டு விட்டு பாலிவுட்டுக்கு டாட்டா காட்டப் போகிறார், கரீனா என, வெளியாகும் தகவலால் தூக்கம் இழந்து தவிக்கிறார் கரீனா கபூர். இதுபற்றி அவரிடம் கேட்டால், கோபத்தில்
ஜிவு ஜிவு என சிவக்கிறது அவரது முகம். "என் மீது யாரோ, கொலைவெறியோடு அலைகிறார்கள் என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது. எங்கள் குடும்பமே நடிப்பு பாரம்பரியமிக்க குடும்பம். இந்த பெருமையை தக்க வைத்துக் கொள்ள
வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். சினிமா என் ரத்தத்தில் கலந்த விஷயம்.
அதை யாராலும் பிரிக்க முடியாது. நடிப்புக்கு தான் முன்னுரிமை கொடுப்பேன். மற்ற விஷயங்கள் எல்லாம் அப்புறம் தான் என, பட படவென, பட்டாசாக வெடித்து தள்ளினார்.
கரீனா குறிப்பிட்ட மற்ற விஷயங்கள் என்ன என்பது தெரியாமல், மண்டை காய்ந்து போய் அலைகிறது பாலிவுட்டின் கிசு கிசு கும்பல்.