'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் |
திருமண வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருப்பதால் சினிமாவுக்கு சில மாதங்கள் விலகி இருக்க முடிவு செய்துள்ளேன், என்று நடிகை இஷா தியோல் கூறியுள்ளார். நடிகை ஹேமமாலினியின் மகள் இஷா தியோலுக்கு, பரத் தக்தானி என்பவருடன் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு நடிப்பிற்கு முழுக்கு போட்டுள்ள இஷா தியோல், தனது கணவருடன் ஒரு நகைக்கடை விளம்பரத்துக்காக பெங்களூரூ வந்தார்கள். அப்போது இஷா தியோல் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறுகையில், இப்போது நான் எந்த புதிய பட வாய்ப்பையும் ஒப்புக்கொள்ளவில்லை. எனக்கு சமீபத்தில்தான் திருமணம் ஆகியிருக்கிறது. திருமண வாழ்க்கையை நான் சந்தோஷமாக அனுபவிக்க வேண்டும். அதற்கு சில மாதங்கள் நான் ஓய்வாக இருக்க வேண்டும். நானாகத்தான் சினிமாவை விட்டு விலகியிருக்கிறேன். ஏதாவது நல்ல கதாபாத்திரங்கள் வந்தால், பார்க்கலாம். நடிப்பு என் ரத்தத்தில் ஊறியிருக்கிறது, என்றார்.