இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
திருமண வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருப்பதால் சினிமாவுக்கு சில மாதங்கள் விலகி இருக்க முடிவு செய்துள்ளேன், என்று நடிகை இஷா தியோல் கூறியுள்ளார். நடிகை ஹேமமாலினியின் மகள் இஷா தியோலுக்கு, பரத் தக்தானி என்பவருடன் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு நடிப்பிற்கு முழுக்கு போட்டுள்ள இஷா தியோல், தனது கணவருடன் ஒரு நகைக்கடை விளம்பரத்துக்காக பெங்களூரூ வந்தார்கள். அப்போது இஷா தியோல் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறுகையில், இப்போது நான் எந்த புதிய பட வாய்ப்பையும் ஒப்புக்கொள்ளவில்லை. எனக்கு சமீபத்தில்தான் திருமணம் ஆகியிருக்கிறது. திருமண வாழ்க்கையை நான் சந்தோஷமாக அனுபவிக்க வேண்டும். அதற்கு சில மாதங்கள் நான் ஓய்வாக இருக்க வேண்டும். நானாகத்தான் சினிமாவை விட்டு விலகியிருக்கிறேன். ஏதாவது நல்ல கதாபாத்திரங்கள் வந்தால், பார்க்கலாம். நடிப்பு என் ரத்தத்தில் ஊறியிருக்கிறது, என்றார்.