ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மலையாள நடிகர் மோகன்லாலின் மகன் பிரணவ், தந்தையின் பாதையில் நடிப்பு பக்கம் திரும்பிவிட, அவரது மகள் விஸ்மாயாவோ சினிமாவில் இருந்து ஒதுங்கியே இருந்து வருகிறார்.. ஆனால் தற்போது அவருக்குள் ஒளிந்து கொண்டுள்ள ஒரு எழுத்தாளரை, தான் எழுதி வெளியிட்டுள்ள, 'கிரையன்ஸ் ஆப் ஸ்டார்டஸ்ட்' என்கிற புத்தகம் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.
கடந்த பிப்-14ல் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு இந்த புத்தகத்தை வெளியிட்ட விஸ்மாயா, தன்னுடைய தந்தையின் மிக நெருங்கிய நண்பர்களுக்கும் தனது நட்பு வட்டாரத்திற்கும் இந்த புத்தகத்தின் பிரதிகளை அனுப்பி வைத்தார். அதில் நடிகர் அமிதாப் பச்சனும் ஒருவர். இந்தப்புத்தகத்தை படித்துவிட்டு விஸ்மாயாவின் இலக்கிய திறமையை பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் அமிதாப்.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், “நான் ரொம்பவே வியக்கும் நடிகர் மோகன்லால், தனது மகள் விஸ்மாயா எழுதிய புத்தகம் ஒன்றை அனுப்பியுள்ளார். ரொம்பவே நுட்பமான, உணர்வுப்பூர்வமான பாடல்கள் மற்றும் ஓவியங்களின் பயணமாக இருக்கிறது இந்த படைப்பு... திறமை என்பது பரம்பரரை குணம்” என பாராட்டியுள்ளார். இவர் தவிர, நடிகர்கள் துல்கர் சல்மான், பிரித்விராஜ் உள்ளிட்டோரும் விஸ்மாயாவின் இந்த புதிய முயற்சிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்கள்.