ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கடந்த பத்தாண்டு காலமாக, தன் அழகாலும், நடிப்பு திறமையாலும், பாலிவுட் ரசிகர்களை கிறங்கடித்துக் கொண்டிருக்கும் பிரியங்கா சோப்ராவுக்கு, மார்க்கெட் அவுட் ஆகி விட்டதாக, பாலிவுட்டில் வதந்தி உலா வருகிறது. "பிரியங்காவுக்கு மார்க்கெட் போச்சு. படங்கள் இல்லாமல், வீட்டில் உட்கார்ந்து, பொழுதை கழிக்கிறார் என, தொடர்ந்து வெளியாகும் வதந்தியால், கொதித்து போயிருக்கிறார், பிரியங்கா. "வேலை வெட்டி இல்லாதவர்கள் தான், இதுபோன்ற செய்தியை பரப்புகின்றனர். சமீபத்தில் கூட, நான் நடித்த, "பர்பி படம், வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. "திவானா மெயின் திவானா, க்ரிஷ்-3, சஞ்சீர் ஆகிய படங்கள் விரைவில் திரைக்கு வரவுள்ளன. "மிலன் டாக்கீஸ், குண்டாய் ஆகிய படங்களில் நடிப்பதற்கு "கால்ஷீட் கொடுத்துள்ளேன். அடுத்த இரண்டு ஆண்டுகள் வரை, "கால்ஷீட் ஹவுஸ்புல். நிலைமை இப்படி இருக்கும்போது, எனக்கு மார்க்கெட் இல்லை என, பொய் மூட்டையை அவிழ்த்து விட்டால், கோபம் வராதா என, சீறுகிறார், பிரியங்கா.