இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
பாலிவுட் நடிகை ஐஸ்வர்யாவுக்கு, கடந்தாண்டு நவம்பரில் பெண் குழந்தை பிறந்தது. ஆரத்யா என்ற அந்த குழந்தையை புகைப்படம் எடுப்பதற்காக, கடந்த ஓராண்டாகவே மீடியாக்காரர்கள் பெரும் முயற்சி செய்தனர். வெளிநாடு சென்று விட்டு, ஐஸ்வர்யா, மும்பை திரும்பும்போதெல்லாம், கேமரா மேன்கள், விமான நிலையத்தில் தவம் கிடந்தனர். ஐஸ்வர்யாவோ, தன் குழந்தையை யாரும் புகைப்படம் எடுத்து விடக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்தார். ஒரு வழியாக, மீடியாக்காரர்களின் நீண்ட நாள் தவம், கடந்த வாரம் பலித்தது. மும்பையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், உலக சினிமாவுக்கு ஐஸ்வர்யா ஆற்றிய சேவையை பாராட்டி, பிரான்சு அரசாங்கம் சார்பில், விருது வழங்கப்பட்டது. இதில் பங்கேற்பதற்காக, தன் குழந்தையுடன் வந்திருந்தார், ஐஸ்வர்யா. வழக்கம்போல் கெடுபிடி இருக்கும் என, மீடியாக்காரர்கள் நினைக்க, ஐஸ்வர்யாவோ, தாராளமாக நடந்து கொண்டார். அப்புறம் என்ன... கேமராக்காரர்கள், ஆரத்யாவை, "பிளாஷ் மழையில் நனைய வைத்தனர். கேமரா வெளிச்சத்தை பார்த்து மிரண்டு, ஒரே அழுகையாக அழுத, தன் குழந்தையை தேற்றுவதற்குள், ஐஸ்வர்யா, திணறிப் போனார்.