ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பாலிவுட்டின் நட்சத்திர காதல் ஜோடியான சைப் அலி கான் - கரீனா கபூர் ஜோடியின் திருமணம் நடந்து முடிந்துள்ள நிலையில் புதுப்பெண் கரீனா கபூர் அளித்துள்ள பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் தனது பேட்டியில், ஏற்கனவே எனக்கும் சைப்புக்கும் திருமணமாகிவிட்டது. 200க்கும் மேற்பட்ட தேனிலவு பயணங்களை கொண்டாடி முடித்துவிட்டோம் என்று கூறியிருக்கிறார்.
இதுபற்றி கரீனா அளித்துள்ள பேட்டியில், ஏற்கனவே எங்களுக்குத் திருமண மாகிவிட்டது. அதை சட்டப்பூர்வமாக்க வேண்டும். அதற்காகத்தைன் இந்த திருமணம். அவ்வளவுதான். நாங்கள் எதற்காகவும் காத்திருக்காமல் உல்லாசப் பயணங்கள் செல்கிறோம். நான் காதலுக்காக தொழிலிலோ, தொழிலுக்காக காதலிலோ சமரசம் செய்துகொண்டதில்லை. என் மாமியார் ஷர்மிளா தாகூர் எனக்கு பெருமளவு ஊக்கம் தருகிறார். சைப்பும், நானும் யாருடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறோமோ அதைத் தொடர்வோம், என்று கூறியுள்ளார்.