டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தென்னிந்திய சினிமாவில் பிரபலமாகும் ஒவ்வொரு நடிகைக்குமே அடுத்து பாலிவுட்டில் கொடியேற்ற வேண்டும் என்பதுதான் தீராத கனவாக இருக்கும். அந்த வரிசையில் ஸ்ரீதேவிக்கு பிறகு பல நடிகைகள் இங்கிருந்து இந்தி சினிமாவுக்கு சென்றதில் அசின் பெரிய அளவில் தற்போது புகழ் பெற்றிருக்கிறார். அதனால் அடுத்தடுத்து காஜல் அகர்வால், தமன்னா போன்ற நடிகைகள் இந்தியில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார்.
இதற்கிடையில் நண்பன் படத்தில் நடித்த இலியானாவும் அந்த படத்தை முடித்த கையோடு இந்தியில் ரன்பீர்கபூர் நடித்த பர்பி படத்தில் நடித்தார். படம் வெற்றி பெற்றதோடு, இலியானாவின் நடிப்பும் அங்குள்ளவர்களை வெகுவாக கவர்ந்து விட்டது. இதனால் மேலும் புதிய படங்களை கைப்பற்றும் அதிரடி முயற்சியில் இறங்கியிருக்கும் அவர், இனி அசினைப்போன்று மும்பையிலேயே செட்டிலாகி முழு நேர இந்தி நடிகையாகப்போவதாக கூறுகிறார்.