மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
சயீப் அலிகானுடன், விரைவில் திருமணம் நடக்கவுள்ளதால், கரீனா கபூரின் முகத்தில், இப்போதே, கல்யாண களை, எட்டி பார்க்க துவங்கி விட்டது. தலைகால் புரியாத சந்தோஷத்தில் இருக்கும் கரீனா, படப் பிடிப்பு தளங்களில், அதிரடியாக ஏதாவது செய்து, படக் குழுவினரை, திக்கு முக்காட வைத்து விடுகிறார். சமீபத்தில், "ஹீரோயின் படத்தின், டப்பிங் வேலைகள், டப்பிங் தியேட்டரில் மும்முரமாக நடந்து கொண்டிருந்தன. அப்போது, மிகப் பெரிய பார்சலுடன் உள்ளே நுழைந்த சிலர், அதை அருகில் இருந்த மேஜையில் வைத்து விட்டுச் சென்றனர். பார்சலை பிரித்தபோது, பிரமாண்டமான பிறந்த நாள் கேக், அதில் இருந்தது. அதில், "ஹேப்பி பர்த்டே மதுர் பண்டர்கர் என, எழுதப்பட்டிருந்தது. இயக்குனர் மதுர் பண்டர்கருக்கு ஆச்சர்யமாகி விட்டது. "என்னுடைய பிறந்த நாளை, யாருக்கும் கூறவில்லையே. யார், கேக், ஆர்டர் செய்தது என, ஒவ்வொருவராக கேட்டுக் கொண்டிருந்தார். கடைசியில், கரீனா தான், யாருக்கும் தெரியாமல், கேக் ஆர்டர் செய்திருந்தார் என்பது தெரியவந்தது. கரீனாவிடம் கேட்டபோது, "விரைவில் திருமணம் நடக்கப் போகிறது. தொடர்ந்து நடிப்பேனா, இல்லையா என்பது உறுதியாக தெரியாது. அதனால், படப்பிடிப்பில் இருக்கும் ஒவ்வொரு நொடியையும், உற்சாகமாக கழிக்க விரும்புகிறேன். அதற்காக தான், இப்படியெல்லாம் செய்கிறேன் என, புன்னகைக்கிறார்.