விஷால் மீது நடவடிக்கை இல்லை! - நடிகர் சங்கம் | மாமனாருக்கு பதில் மருமகனை இயக்குகிறார் கே.வி.ஆனந்த்!! | சூதாட்ட சர்ச்சை; நடிகைகள் பக்கம் திரும்பும் போலீஸ்; கலக்கத்தில் தமிழ் நடிகைகள் | தாய்லாந்தில் படமாகும் விஸ்வரூபம்-2!! | அரசியலில் கலக்க வருகிறார் ப்ரீத்தி ஜிந்தா! | கொஞ்சம் வயதாகி வருவதால் இரவு நேரங்களில் இசையமைப்பதில்லை-ஏ.ஆர்.ரஹ்மான் | கேன்ஸ் படவிழாக்குழுவினரை கவர்ந்த ஐஸ்வர்யா ராய் மகள்! | ஷாங்காய் விழாவில் கமலின் பேசும் படம்! | சித்தார்த்துடன் மீண்டும் இணைகிறார் சமந்தா! | மரியானின் திகில் அலை இன்னமும் மனசுக்குள்ள அடிச்சிக்கிட்டேயிருக்கு! -சொல்கிறார் தனுஷ் |
ரூ.20 கோடி கடன் விவகாரத்தில் டைரக்டர் ராம் கோபால் வர்மாவுக்கு தயாரிப்பாளர் சங்கம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பாலிவுட் டான்கள், பிரபல ரவுடிகளின் வாழ்க்கை கதையை மையமாக வைத்து பரபரப்பான படங்களை இயக்கியவர் ராம் கோபால் வர்மா. இவர் பாலிவுட் பைனான்சியர் பரத் ஷாவிடம் ரூ.10 கோடி பைனான்ஸ் வாங்கி இருந்தார். பணத்தை உரிய நேரத்தில் திருப்பி தராததால் ரூ.10 கோடி கடன் வட்டியுடன் சேர்த்து ரூ.20 கோடி ஆனது. பலமுறை கேட்டும் வர்மா பணத்தை தராததால் இதுதொடர்பாக மும்பையில் உள்ள தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பரத் ஷா புகார் அளித்தார். ஆனால் எந்த பலனும் இல்லை.
பிறகு இதுபற்றி சிட்டி சிவில் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த விவகாரத்தை தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பேசி தீர்த்துக்கொள்ளும்படி கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து சங்கத்திற்கு வந்து விளக்கம் தரும்படி வர்மாவுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால் அதற்கு அவர் பதில் அளிக்கவில்லை. இதையடுத்து தயாரிப்பாளர் சங்கமே வர்மாவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியது.
இதுபற்றி வக்கீல் அதுல் மன்காம் கூறுகையில், ‘கடந்த ஆண்டு இப்பிரச்னையை தயாரிப்பாளர் சங்கத்தின் மூலமாக பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று கோர்ட் உத்தரவிட்டது. ஆனால் வர்மா தரப்பிலிருந்து பதில் எதுவும் வரவில்லை. இதையடுத்து அவருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதன்படி சங்கத்திற்கு அவர் நேரிலோ அல்லது அவரது பிரதிநிதியோ வந்து பிரச்னையை பேசி தீர்க்க கேட்கப்பட்டுள்ளது, என்றார்.