Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு »

டெல்லி கணேஷ் சிறப்பு பேட்டி

21 ஜூலை, 2012 - 17:20 IST
எழுத்தின் அளவு:

     வண்ணம்.. எண்ணம் உங்கள் வாழ்கையில்...?

வண்ணங்களை வைத்தே ஒருவருடைய குணாதிசயங்களை சொல்லி விடமுடியும்.. வண்ணங்களை தேர்ந்தெடுப்பது உங்கள் எண்ணங்களில் இருந்துதான் வருகிறது.. உங்கள் எண்ணங்கள் சிறப்பாக இருந்தால் வண்ணங்களும் சிறப்பாக இருக்கும்.

@@@

இல்லங்களில் வண்ணம் பற்றி...?

பச்சை மஞ்சள் ஆரஞ்சு என வெளிப்புற வண்ணங்கள் வீட்டில் இருந்தால் அது அவ்வளவு அழகாக இருப்பதில்லை.. கண்ணுக்கு குளுமை தருவதாக அமைந்தால் அது நல்லது..

@@@

உங்களுக்கு பிடித்த வண்ணம்..? காரணம்..?

பிடித்த வண்ணம் பச்சை நிறம். ஒரு நாட்டின் வளர்சிக்கு பசுமை புரட்சி அவசியம்.. நன்றாக விளைந்த பச்சை பசேல் என்ற வயல் வெளிகளில் சுற்றி திரிந்தால் ஏற்படும் இன்பமே தனி.

@@@

உங்களுக்கு பிடித்த கட்டிடங்கள் மற்றும் அதன் வண்ணம்...?


வீடுகளின் வெளிப்புற தோற்றம் என்று எடுத்துக்கொண்டால் யானை தந்தம் ஐவரி வண்ணம் தான். ஐதராபாதில் இருக்கும் ராமோஜி பிலிம் சிட்டி அருகில் ஒரு கோயில் உண்டு. அதன் நிறம் ஐவரி தான்.. அந்த கோபுரம் வராத படங்களே இல்லை என கூறலாம்.. சகுனி படத்தில் கூட சமீபத்தில் அந்த கோபுரத்தின் அருகில் தான் ஷூட்டிங் நடந்தது. எண்களின் சொந்த ஊரில் உள்ள கோயிலின் கோபுரத்திற்கும் வண்ணம் அதுவே.. மனதிற்கு இதமான ஒரு நிறம்.

@@@

உங்களுக்கு பிடித்தது ஏசியன் பெயின்ட்ஸ் என..

முன்பெல்லாம் வீட்டிற்கு வெள்ளை அடிப்பதென்றால் பெரிய காரியமாக தெரிந்தது.. இப்போதுள்ள நவீன யுகத்தில் ஏசியன் பெயின்ட்ஸ் அதை சுலபமாக்கி விட்டார்கள்.. ஏசியன் பெயின்ட்ஸ் வண்ணங்களை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் தேர்வு செய்து கொள்ளலாம்.. உடனடியாக கம்ப்யூட்டர் வழியாக சுலபமாக தேர்வு செய்து சுடசுட எந்த வண்ணங்களை வேண்டுமானாலும் தேர்வு செய்யும் சௌகரியம் உள்ளது.. வீட்டிற்கே வந்து லேப்டாப்பில் எந்த வண்ணத்தையும் சேர்வு செய்யும் வசதியும் வைத்துள்ளர்கள்.. முக்கியமாக மிக குறைந்த செலவில் நாம் விரும்பும் வண்ணமாக வீடு மாறிவிடுகிறது.

@@@
 

இன்றைய யதார்த்த வாழ்க்கையில் நீங்கள் சந்திக்கும் வண்ணங்கள்..? அதன் விளைவு பற்றி..?


உதாரணமாக டிராபிக் சிக்னலில் உள்ள சிகப்பு ஆரஞ்சு மற்றும் பச்சை நிறங்களை எடுத்து கொண்டால்.. மக்களிடம் பொறுமை இல்லாமல் பொய் விட்டது.. ரெட் சிக்னல் இருக்கும்போதே பின்னால் இருந்து தொடர்ந்து ஹாரன் அடிக்கும் பழக்கம் எனக்கு மிகவும் கோபத்தை உண்டு பண்ணும். அந்த சிக்னலில் உள்ள எனக்கு பிடித்த பச்சை நிறத்தை கூட ரசிக்க முடியாமல் போய் விடுகிறது.

@@@

ஆரஞ்சு வண்ணம் பற்றி தங்களின் கருத்து..

கன்னியாகுமரியில் சூர்ய உதயம் பார்ப்பது ரம்யமானது.. முதலில் நீல நிறத்தில் இருக்கும் வானம் கொஞ்சம் கொஞ்சமாக நிறம் மாறி முழுமையான ஆரஞ்சு நிறமாக சூரியன் நிலை. மிகவும் பிடித்தமான ஒன்று.

@@@

வெள்ளை வண்ணம் பற்றி தங்களின் கருத்து..

வெள்ளை வண்ணம் உண்மை, சத்யம், ஞாயம் இவைகளுக்கான வண்ணம். வெள்ளை உடை அணிந்து தன்னுடைய குற்றங்களை மறைக்கிறார்கள் சிலர். அதுதான் மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது. மகாகவி பாரதியாரின் முண்டாசும் வெள்ளைதான்.  அது அர்த்தமுள்ள வெள்ளை நிறம்.

@@@

வானவில் பற்றி தங்களின் கருத்து..

வானவில் என்றதும் எனக்கு ஞாபகம் வருவது, ஏசியன் பெயின்ட்ஸ் சிம்பல் தான்.  வானவில் பல நிறங்களை கொண்ட ஒரு அழகான இயற்கையின் படைப்பு. அதை நாம் ரசித்துகொண்டே இருக்கலாம்.  எப்போதுமே வானவில்லாக இருந்து மிகவும் ஆச்சர்யப்படும் வகையில், நிரந்தரமாக அதன் அழகை ரசிக்க  வேண்டுமா என்று யோசிக்க வைக்கும் அளவிற்கு கனடாவிலிருந்து நயாகரா நீர்விழ்ச்சியில் இருக்கும் நிரந்தரமான வானவில்கள் நம்மை நினைக்க வைக்கும். இயற்கையின் வண்ண படைப்புதான் வானவில்.

@@@

மறக்க முடியாத பொருட்கள், பரிசுகள்...?

கிளாஸ் டீச்சர்ஸ் வழங்கிய பிரம்மச்சார்ய அவார்ட் என்னுடைய கலை சேவைக்காக வழங்கப்பட்ட விருதுகளில் ஒன்று. அடுத்ததாக புதுச்சேரியை சேர்ந்த ஒரு ரசிகை தன் கையால் கோலப்போடியால் என்னை தத்ரூபமாக வரைந்திருந்தார். அதை ஒரு புகைப்படமாக நான் பொக்கிஷம் போல் வைத்திருக்கிறேன். மற்றொரு முக்யமான ஒரு நினைவுபரிசு என்று சொல்வதென்றால் நான் முன்பு துபாய் சென்றிந்த போது சிவராமன் என்ற ஒரு நண்பர் அறிமுகமானார். அவர் மூலமாக இளைய திலகம் பிரபு மற்றும் சிவாஜி கணேசன் அவர்களின் நட்பும் கிடைத்தது. சிவரமான் காலமாகிவிட்ட பிறகு நான் அவருடைய மகளை அபுதாபியில் ஒரு தடவை சந்தித்த போது கொடுத்த ஒரு பரிசு இன்னும் என்னிடம் உள்ளது. இதைத்தவிர எனக்கு மற்றவர்கள் கொடுக்கின்ற பரிசு எல்லாமே பிள்ளையார் உருவாக தான் இருக்கும். காரணம் என்ன என்று தெரியவில்லை ஒருவேளை என் பெயரிலேயே கணேசன் இருப்பதாலோ என்னவோ.


 @ @@ @@@

திரைப்பட துறையில் வண்ணங்களின் பங்கு...?

எண்ணங்களின் பிரதிபலிப்பு தான் வண்ணங்கள்.. கேமராமென் எண்ணத்தில் உருவாகும் அந்த வண்ணங்களை பாராட்டாமல் இருக்க முடியாது.. அப்படி சொல்ல போனால் பாலுமகேந்திரா, பி.சி.ஸ்ரீராம் மற்றும்  சந்தோஷ் சிவன் போன்றோரை குறிப்பிடலாம். வண்ணத்திரை என்றுதானே சொல்கிறோம் எனவே வண்ணம் இன்றி திரை இல்லை.

@@@

இந்தி படங்களில் நடித்த அனுபவம் குறித்து...


தஸ் என்ற இந்தி திரைப்படத்தின் டைரக்டர் இந்தி, தமிழ் மற்றும் ஆங்கிலம் தெரிந்த ஒருவர் அரசியல்வாதியாக நடிக்க என்னை அழைத்தார். சஞ்சய் தத் மற்றும் பலர் நடித்த அந்த திரைபடத்தில் நடித்தேன். டீன் கி சாவி என்ற படம் இந்தியில் வெளியான ஒரு படம். அதில் ஒரு காமெடி வில்லனாக நடித்துள்ளேன்.. படம் வெளிவந்தால் நிறைய இந்தி பட வாய்ப்புகள் வரும் என ஆவலுடன் எதிர்பார்கிறேன்.

@@@

 
டப்பிங் அனுபவம் பற்றி...

தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி நடித்து தமிழில் வெளியான அத்தனை படங்களுக்கும் நான்தான் டப்பிங் குரல் கொடுத்துள்ளேன். அதே போல் மழலை பட்டாளம் என்னும் படத்தில் விஷ்ணுவர்தன் அவர்களுக்கு நான்தான் குரல் கொடுத்துள்ளேன். அவர் என்னை செல்லமாக ஹலோ மி வாய்ஸ் என்றே கூப்பிடுவார். குடும்பம் ஒரு கதம்பம் படத்தில் பிரதாப் போத்தனுக்கும், மோகன்லால், மம்மூட்டி, நெடுமுடி வேணு போன்ற பல கலைஞர்களுக்கு நான் குரல் கொடுத்துள்ளேன்.

@@@
 

மூத்த கலைஞராய் மற்றவர்களுக்கு நடிப்பு சொல்லிதர விருப்பம் பற்றி...?

நடிப்பு, சொல்லிகொடுத்து வருவதில் எனக்கு நம்பிக்கை இல்லை.. அது தானாக வருவது.. ரத்தத்தில் கலந்த ஒரு உடன்பாடு. கேமரா பற்றியோ எடிட்டிங் பற்றியோ ஒருவர் படித்து தெரிந்து கொள்வது போல் நடிக்க படிக்க முடியாது என்பது என் கருத்து..

@@@

ரஜினிகாந்த் மற்றும் கமலுடன் நடித்த அனுபவம் பற்றி..

ரஜினிகாந்துடன் நடித்தாலும் ஒன்றுதான் நடிக்காவிட்டாலும் ஒன்றுதான்.. மக்கள் ரஜினியாய் பார்பர்களே அன்றி என்னை இல்லை.. மூன்று முகம் மற்றும் பொல்லாதவன் படத்தில் நான் போலீஸ் ஆபீசராக நடித்ததை நான் சொல்லிதான் மற்றவர்கள் புரிந்து கொள்ளும் அளவிற்கு உள்ளது.  ராகவேந்திரா படத்தில் மட்டுமே மக்கள் நினைவு வைத்திருக்கிறார்கள். கமலுடன் நடித்த சிம்லா ஸ்பெஷல், அவ்வைஷண்முகி, மைகேல் மதன காமராஜன், மற்றும் பல படங்கள் எனக்கு புகழ் வாங்கி கொடுத்த படங்கள்.. கமலுடன் நடித்ததில் கிடைத்த ஒரு பாராட்டு ரஜினியுடன் நடித்ததில் கிடைக்கவில்லை என்றே சொல்லலாம்.

@@@

சின்ன திரையில் நடித்த மற்றும் குறிப்பாக மர்மதேசம் பற்றி...

இப்பொழுது டிவி சேனல்ஸ் வருவதற்கு முன்னரே தூர்தர்ஷன் எடுத்த பல சீரியல்களில் நான் நடித்துள்ளேன்.  குறிப்பாக மர்ம தேசம் எல்லோராலும் பாரட்டபட்ட ஒரு சீரியல்.  டைரக்டர் நாகா ஒரு சின்னதிரை மணி ரத்தினம் என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு அவர் இயற்கையாக நடிக்க வைத்து அனைவரின் பாராட்டினை பெற்றார். தெலுங்கில் ரகசியம் என டப் செய்யப்பட்டு மிக பிரபலம் அடைந்த ஒரு சீரியல்..

@@@

நீங்கள் வாங்கிய விருதுகள் பற்றி...

நிறைய பரிசுகள் வாங்கி இருந்தாலும் முன்னாள் முதல்வர்  எம்.ஜி.ஆர் அவர்கள் கையால் பசி படத்திற்கான சிறந்த நடிகர் விருது வாங்கியது மறக்க முடியாதது.. அவர்கள் யாருக்கும் தராத ஒரு மரியாதயை என் தோழ் மேல் கை கோர்த்து, அதுவரை புகைப்படம் எடுக்காத போடோக்ராபர்களிடம் எல்லோரையும் நன்றாக படம் எடுங்கள் என்று கூறி என்னை மெய் சிலிர்க்க வைத்தார்.. அந்த அவார்ட் வாங்கும் புகைப்படத்தை இன்னும் பொக்கிஷமாக வைத்து பாதுகப்பதில் பெருமை அடைகிறேன்.

@@@

தினமலர் வாசகர்களுக்கு எனது நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in