தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பெரிய நடிகைகளாக, முன்னணி நடிகைகளாக இருப்பவர்கள் குத்துப்பாட்டுக்கு எல்லாம் ஆடக்கூடாது என்று நடிகை ஹேமமாலினி அட்வைஸ் செய்துள்ளார். முன்பெல்லாம் குத்துபாட்டு ஆடுவதற்கே தனியாக நடிகைகள் இருந்தார்கள். ஆனால் இப்போதோ முன்னணி நடிகைகள் பலரே இதுபோன்ற பாட்டுக்கு நடனம் ஆட ஆரம்பித்துவிட்டனர். இதற்கு முக்கிய காரணம் ஒரு பாட்டுக்கு கொடுக்கப்படும் அதிக சம்பளம் தான். பாலிவுட்டின் டாப் நடிகைகளான கரீனா கபூர், தீபிகா படுகோனே, கத்ரீனா கைப் உள்ளிட்ட பலரும் இதுபோன்ற பாடல்களில் ஆட ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில், பாலிவுட்டின் கனவு கன்னியாக திகழ்ந்த நடிகை ஹேமமாலினி, முன்னணி நடிகைகளாக இருப்பவர்கள் குத்துப்பாட்டுக்கு எல்லாம் ஆடக்கூடாது என்று கூறியுள்ளார். சமீபத்தில் மும்பையில் நடந்த இந்திய சினிமாவின் 100வது ஆண்டு விழாவில் ஹேமமாலினி பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், சினிமாவில் முன்னணி நடிகைகளாக இருப்பவர்கள் குத்தாட்டம் என்ற பெயரில் ஒருபாட்டுக்கு கவர்ச்சியாக ஆட ஆரம்பித்துள்ளனர். முன்னணி நடிகைகளாக இருப்பவர்கள் அப்படி ஆட கூடாது. அது எனக்கு பிடிக்காது. ஆனால் ரசிகர்கள் அதைத்தான் விரும்புகிறார்கள். இருந்தும் நான் ஒன்றை சொல்லி கொள்கிறேன். முன்னணி நடிகைகளாக வளர்ந்த பின்னர், அந்த நடிகைகளுக்கு என்று ஒரு நல்ல பெயர் இருக்கும். அதை குத்தாட்டம் போட்டு அவர்கள் கெடுத்து கொள்ள கூடாது. அதற்கு என்று தனியாக நடிகைகள் சிலர் உள்ளனர் என்று கூறியுள்ளார். மேலும் எனக்கு தெரிந்து ஸ்ரீதேவி, மாதுரி தீட்சித் ஆகியோருக்கு பிறகு ஐஸ்வர்யா ராய் நன்றாக நடனம் ஆடுகிறார். அவருக்கு அடுத்து வித்யாபாலன் பரவாயில்லை. மற்ற நடிகைகள் யாரும் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு ஆடவில்லை என தெரிவித்து இருக்கிறார்.