‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
பல ஆண்டுகளாக பரம விரோதிகளாக இருந்த தீபிகாவும், கத்ரீனாவும், இப்போது நெருக்கமான தோழியராகி விட்டனர். பாலிவுட்டின் பிரபல நடிகர், ரன்பீர் கபூரை, சில ஆண்டுகளுக்கு முன், இருவருமே போட்டி போட்டு காதலித்தனர். இதனால் ஏற்பட்ட தகராறில், இருவரும் பேசுவது கூட இல்லை. நேரில் பார்த்தால் கூட, முகத்தை திருப்பிச் சென்று விடுவர்.சமீபத்தில் நடந்த தீபிகா - ரன்வீர் சிங் திருமணத்துக்கு பின், எல்லாமே தலைகீழாகி விட்டது. திருமண வரவேற்புக்கு கத்ரீனா வரமாட்டார் என்று தான், அனைவரும் நினைத்தனர். ஆனால், தவறாமல் ஆஜரானதுடன், கடைசிவரை அங்கேயே இருந்து, மணமக்களை வாழ்த்திவிட்டுத் தான் சென்றார். திருமணம் நிச்சயமானதுமே, ரன்வீர் சிங் எனக்கு அழைப்பிதழ்வைத்தார். வரவேற்பில் பங்கேற்றது, இனிமையான அனுபவமாக இருந்தது. ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என, களை கட்டியது. ஒவ்வொரு நிமிடமும், மகிழ்ச்சியாக இருந்தது.இப்போது, நானும், தீபிகாவும் நெருங்கிய தோழியராகி விட்டோம் என,மகிழ்ச்சியுடன் கூறுகிறார், கத்ரீனா.