கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி | ஜிம்மில் வெறித்தனமான ஒர்க்கவுட்டில் இறங்கிய ரகுல் ப்ரீத் சிங் | டப்பிங் யூனியன் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற ராதாரவி |
ரஜினிகாந்த், அக்ஷய்குமார், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடித்த '2.0' படம் ஹிந்தியில் டப்பிங் ஆகி வட இந்தியாவில் வெளியானது. தமிழ்நாட்டைவிட ஹிந்தி பேசும் மாநிலங்களில் இந்தப் படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தது. அதனால், ஒரு வாரத்திற்கு முன்னதாக ஐந்தே நாட்களில் விரைவாக 100 கோடி வசூலைக் கடந்த 2.0 படம் தற்போது 150 கோடியைக் கடந்துள்ளது.
அமிதாப்பச்சன், ஆமீர்கான் ஆகியோர் நடித்த நேரடி ஹிந்திப் படமான 'தக்ஸ் ஆப் ஹிந்தோஸ்தான்' வசூலையும் '2.0' வசூல் தொகை கடந்துவிட்டது. சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் 2.0 படத்தின் வசூல் வார நாட்களை விட அதிகமாகியுள்ளது. இன்னும் ஒரு வாரம் ஓடினால் ஹிந்தியில் மட்டுமே இந்தப் படம் 200 கோடி ரூபாய் வசூலைக் கடக்கும் என்கிறார்கள்.
அக்ஷய் குமார் படத்தில் இருந்ததால் இது சாத்தியமானது என்ற குரலும் எழாமல் இல்லை. இருப்பினும் ஒரு தமிழ்ப் படம் ஹிந்தியில் டப்பிங் செய்யப்பட்டு முதன்முதலாக 150 கோடி ரூபாய் வசூலைத் தாண்டியது சாதாரண விஷயமல்ல. ஆனாலும், 'பாகுபலி 2' படத்தின் வசூலை '2.0' படம் முறியடிக்க முடியாமல் போனது ரஜினி ரசிகர்களுக்கு வருத்தமான ஒரு விஷயம்தான்.