'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
அபிஷேக் கபூர் இயக்கத்தில் தோனி பட புகழ் சுசாந்த் சிங், நடிகை சாரா அலிகான் நடிப்பில் வெளியாகி உள்ள படம் கேதர்நாத். 2013ம் ஆண்டு உத்தரகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை மையமாக வைத்து, அதன் உடன் காதலையும் இணைத்து வெளியாகி உள்ள படம் இது.
இப்படத்திற்கு ஆரம்பம் முதலே எதிர்ப்புகள் கிளம்பின. இந்து மதத்தையும், இந்த மக்களின் நம்பிக்கைக்கு அடையாளமாக இருக்கும் கேதர்நாத்தை அவமதிப்பது போன்று படத்தில் காட்சிகள் உள்ளன, இப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.
இந்து சேனா அமைப்பின் தலைவர் பிரகாஷ்ராஜ்புத் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் அந்த வழக்கை நீதி மன்றம் தள்ளுபடி செய்து விட்டதோடு, வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்தது. இப்படம் தொடர்பாக உத்தரகண்ட் மாநிலத்தில் போராட்டங்கள் நடந்தன.
இதனால் படத்தை வெளியிட உயர்நீதிமன்றம் அனுமதி கொடுத்த போதும், சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையில், ஹரித்துவார், நைனிடால், டேராடூன், பாவுரி, அல்மோரா, உதம்சிங் நகர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கேதர்நாத் படத்தை வெளியிட அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.