'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பாலிவுட்டின்
முன்னணி நட்சத்திரங்களான, தீபிகா - ரன்வீர் சிங் திருமணம்
முடிந்து, ஒரு மாதம் ஆகப் போகிறது. ஆனாலும், மும்பையில், அதன் தாக்கம்
இன்னும் எதிரொலிக்கத் தான் செய்கிறது. கடந்த சில நாட்களாக,
மும்பையின் நட்சத்திர ஓட்டல்களில், இவர்களது திருமண வரவேற்பு
களை கட்டியது. தொடர்ந்து வாழ்த்து மழையில் நனைகிறது, இந்த நட்சத்திர
ஜோடி. திருமணத்துக்கு பின், தீபிகா அளித்துள்ள முதல் பேட்டி:
ரன்வீர் சிங்கிடம், உங்களுக்கு பிடித்த விஷயங்கள்...
அவர், ஒரு குழந்தையை போன்றவர். ஆனால், புத்திசாலி. எல்லா விஷயங்களுக்கும்,
ரொம்பவே உணர்ச்சி வசப்படுவார். இந்த விஷயத்தில், நான், அவருக்கு, நேர் எதிர்.
எந்த விஷயத்துக்காகவும், உணர்ச்சியை வெளிப்படுத்த மாட்டேன். எனக்குள்ளேயே
புதைத்து வைத்திருப்பேன். ஆனால், அவர் அப்படியில்லை. ஒரு குழந்தையை போல,
எல்லாவற்றையும் கொட்டித் தீர்த்து விடுவார்.
ரன்வீர் மீதான உங்களின் காதலை அளவிட முடியுமா?
என்னுடை மிகச் சிறந்த நண்பர், ரன்வீர். நல்ல பார்ட்னர். நம்பிக்கைக்குரியவர். அவருக்கு முன், நான் ஒரு முட்டாள். இனி, எல்லாமே எனக்கு அவர் தான்.
திருமணத்துக்கு பின், பெண்கள், தங்கள் தனித்தன்மையை இழந்து விடுவதாக ஒரு பேச்சு உள்ளதே...?
நம் நாட்டின் கலாசாரம், பாரம்பரியம், பழக்கவழக்கங்கள் பற்றி, எனக்கு நன்றாக தெரியும். குழந்தை பருவத்திலிருந்தே, இதை தெரிந்து வைத்திருக்கிறேன். திருமணம் என்பதை, ஒரு பெண்ணின் வாழ்க்கையின் அடுத்த கட்டமாகவே பார்க்க வேண்டும். என்னை பொறுத்தவரை, என் கேரக்டரை மாற்ற மாட்டேன்.எனக்கு
பிடித்தவற்றை செய்வேன். திருமணத்துக்கு பின், பெண்கள், தங்கள்
தனித்தன்மையை இழந்து விடுவதாக கூறுவதை ஏற்க முடியாது; அதற்கான
வாய்ப்பும் இல்லை.
திருமணத்துக்கு பின், உங்களின் திரையுலக பயணம் எப்படியிருக்கும்?
ரொம்ப சவாலானதாகவே இருக்கும் என நினைக்கிறேன். நடிப்புடன், படத் தயாரிப்பிலும் முழுவீச்சில் ஈடுபட திட்டமிட்டுள்ளேன். இதற்கு, என் கணவர் உதவுவார். ஆசிட் வீச்சால்
பாதிக்கப்பட்ட பெண்களின் வாழ்க்கையை மையமாக வைத்து ஒரு படத்தை தயாரிக்க போகிறேன். அதற்கான
வேலைகள் வேகமாக நடக்கின்றன. இன்னும் சில நாட்களில், படப்பிடிப்பு
துவங்கும். இதில், கதாநாயகியாக, நானே நடிக்கிறேன்.