தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பம்பாய், காதலர் தினம், கண்ணோடு காண்பதெல்லாம் போன்ற தமிழ் படங்களிலும், ஏராளமான ஹிந்தி படங்களிலும் நடித்தவர் நடிகை சோனாலி பிந்த்ரே. இவர் தயாரிப்பாளர், கோல்டி பெல்லை கடந்த 2002ம் ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிப்பதை குறைத்த சோனாலி, கடந்த ஜூலை மாதம், தான் புற்றுநோயால் பாதிக்கப்படுவதாக அறிவித்தார்.
இதையடுத்து சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார் சோனாலி. தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை முடிந்து இந்தியா திரும்பி உள்ளார் சோனாலி.
இதுப்பற்றி சோனாலியின் கணவர் கோல்டி கூறுகையில், சோனாலி பிந்த்ரே உடல்நலம் தேறி வருகிறார். மீண்டும் நோய் தாக்கினால் அதற்கு ஏற்றபடி சிகிச்சை மேற்கொள்ளப்படும். சோனாலி திடமான பெண். அவரை நினைத்து பெருமைப்படுகிறேன். அனைவரின் அன்பு மற்றும் ஆதரவுக்கு நன்றி என்றார்.