மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? |
விவசாயிகளின் கடன் பிரச்னையை தீர்க்க ரூ.30லட்சம் வழங்கி உதவி செய்து இருக்கிறார் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன். மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏராளமான விவசாயிகள் வாங்கிய கடனை கட்ட முடியாமல் தற்கொலை செய்து வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இத்தகவலை கேட்ட பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் அவர்களுக்கு உதவ முன் வந்து இருக்கிறார்.
மகாராஷ்டிராவின் விதர்பா பகுதியில் உள்ள சுமார் 20 கிராமங்களை சேர்ந்த 114 விவசாயிகளின் கடன்களை அடைக்க ரூ.30 லட்சத்திற்கான காசோலையை வழங்கி இருக்கிறார் அமிதாப். விதர்பாவில் நடந்த இதற்கான விழாவில் அத்தொகுதியை சேர்ந்த எம்.பி. தத்தா மேகே உரிய விவசாயிகளிடம் வழங்கினார். நிகழ்ச்சியில் பங்கேற்காத சில விவசாயிகளுக்கு அவரது வீடுகளுக்கே நேரடியாக சென்று வழங்கியுள்ளனர் அதிகாரிகள். தற்கொலை செய்யும் அளவுக்கு போன விவசாயிகளுக்கு அமிதாப், பணம் கொடுத்து உதவியது அவர்களுக்கு பெருமகிழ்ச்சியாக உள்ளது
இதனிடையே மகாராஷ்டிராவில் விவசாயிகளுக்கு அமிதாப் உதவியை செய்ததை அடுத்து, உ.பி.யில் உள்ள விவசாயிகள், தங்களுக்கும் உதவ வேண்டும் என்று அவருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.