தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பாலிவுட்டின் காதல் ஜோடிகளான ரன்வீர் சிங், தீபிகா படுகோனே திருமணம் இத்தாலி நாட்டில் உள்ள லேக் கோமோ என்ற இடத்தில் சிறப்பாக நடைபெற்றது. அந்தத் திருமணத்திற்கு வருகை புரிந்த அனைவருக்கும் செல்போன் எடுத்து வருவதற்குத் தடை விதிக்கப்பட்டது. அதனால், ரன்வீர், தீபிகா ஆகியோரின் எந்த ஒரு திருமணப் புகைப்படமும் இணையங்களில் கூட வெளியாகவில்லை.
பாலிவுட்டின் பிரபலங்களை விரட்டி விரட்டி புகைப்படம் எடுக்கும் 'பப்பராசி' புகைப்படக் கலைஞர்களுக்கு அந்தத் திருமணம் பெரும் சவாலாகவே இருந்தது. அங்குள்ள புகைப்படக் கலைஞர்கள் கூட அந்தத் திருமணத்தை எடுக்க முடியவில்லை. எப்படியாவது அவர்களது திருமண புகைப்படத்தை வெளியிட வேண்டும் என பாலிவுட்டின் முன்னணி பத்திரிகைகளும் இணையதளங்களும் பெரும் முயற்சி செய்தன. ஆனால், அவர்களுக்கு அதில் தோல்வியே கிடைத்தது.
அதிகாரப்பூர்வ திருமண புகைப்படத்தை புது திருமணத் தம்பதியரே வெளியிட்டால்தான் உண்டு.