கேம் சேஞ்சர் படத்தில் மூன்று வில்லன்கள்? | ஒரே நேரத்தில் பஹத் பாசிலை வைத்து இரண்டு படங்களை தயாரிக்கும் ராஜமவுலி மகன்! | பெண்களால் முடியாதது எதுவுமில்லை! அண்ணா பல்கலை விழாவில் சூர்யா பேச்சு | கேரள ரசிகர்கள் தள்ளுமுள்ளு! விஜய்யின் கார் கண்ணாடி உடைந்தது!! | இறுதிக்கட்டத்தை நெருங்கிய ஜெயம் ரவியின் ஜீனி! | ஆண்ட்ரியாவுக்காக அடம்பிடித்த இயக்குனர் | ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாள படம்: மஞ்சும்மேல் பாய்ஸ் சாதனை | ‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! |
பாலிவுட்டின் காதல் ஜோடிகளான ரன்வீர் சிங், தீபிகா படுகோனே திருமணம் இத்தாலி நாட்டில் உள்ள லேக் கோமோ என்ற இடத்தில் சிறப்பாக நடைபெற்றது. அந்தத் திருமணத்திற்கு வருகை புரிந்த அனைவருக்கும் செல்போன் எடுத்து வருவதற்குத் தடை விதிக்கப்பட்டது. அதனால், ரன்வீர், தீபிகா ஆகியோரின் எந்த ஒரு திருமணப் புகைப்படமும் இணையங்களில் கூட வெளியாகவில்லை.
பாலிவுட்டின் பிரபலங்களை விரட்டி விரட்டி புகைப்படம் எடுக்கும் 'பப்பராசி' புகைப்படக் கலைஞர்களுக்கு அந்தத் திருமணம் பெரும் சவாலாகவே இருந்தது. அங்குள்ள புகைப்படக் கலைஞர்கள் கூட அந்தத் திருமணத்தை எடுக்க முடியவில்லை. எப்படியாவது அவர்களது திருமண புகைப்படத்தை வெளியிட வேண்டும் என பாலிவுட்டின் முன்னணி பத்திரிகைகளும் இணையதளங்களும் பெரும் முயற்சி செய்தன. ஆனால், அவர்களுக்கு அதில் தோல்வியே கிடைத்தது.
அதிகாரப்பூர்வ திருமண புகைப்படத்தை புது திருமணத் தம்பதியரே வெளியிட்டால்தான் உண்டு.