டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பாலிவுட் சூப்பர் நடிகர் ஷாருக்கான் நேற்று முன் தினம் தனது 53வது பிறந்தநாளை கொண்டாடினார். எப்போதுமே தனது நண்பர்களுக்கு இரவு பிறந்தநாள் பார்ட்டி கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளார் ஷாருக்கான். அந்தவகையில் மும்பையில் உள்ள பிரபல இரவு விடுதியில் நடைபெற்ற பிறந்தநாள் பார்ட்டியில் தனது ஜீரோ படக்குழுவினர் மற்றும் தனது குடும்பத்தினருடன் கலந்துகொண்டார் ஷாருக்கான்.
ஆனால் நள்ளிரவு தாண்டியும் கொண்டாட்டம் நீண்டுகொண்டே சென்றதுடன், விடுதியில் அதிக சப்தத்தில் ஒலித்த பாடல்கள் பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதாக காவல்துறைக்கு புகார் சென்றது. இதையடுத்து அங்கே விரைந்த மும்பை போலீசார் சப்தத்தை குறைக்கும்படி வலியுறுத்தினார்கள். இதனால் அப்செட்டான ஷாருக்கான் உடனே பார்ட்டியில் இருந்து பாதியிலேயே கிளம்பி விட்டாராம்.