தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
எப்.டி.ஐ.ஐ., எனப்படும் இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி மையத்தின் தலைவர் பொறுப்பை பிரபல பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ராஜினாமா செய்தார். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிக்கான நடிகர், இயக்குனர் உள்ளிட்ட பணிகளுக்கு பயிற்சி அளிக்கும், எப்.டி.ஐ.ஐ., தலைவராக, பிரபல பாலிவுட் நடிகர் அனுபவம் கெர், கடந்தாண்டு அக்டோபரில் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், தன் பதவியை ராஜினாமா செய்வதாக, மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர், ராஜ்யவர்தன் சிங் ரதோருக்கு அனுபம் கெர் கடிதம் அனுப்பியுள்ளார். அதில் அவர், கூறியுள்ளதாவது: சர்வதேச, டிவி நிகழ்ச்சிக்காக, அமெரிக்காவில் தொடர்ந்து ஒன்பது மாதங்கள் தங்கியிருக்க வேண்டியுள்ளது.
அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இதேபோன்று, தொடர்ந்து செல்ல வேண்டியுள்ளது. இந்த நிலையில், மையத்தின் தலைவராக தொடர்வது, முறையானதல்ல. அது மாணவர்களுக்கும், நிர்வாகத்துக்கும், சிரமத்தை ஏற்படுத்தும். அதனால், இந்தப் பதவியில் இருந்து விலகுகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.