டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
மீடூ பாலியல் குற்றச்சாட்டு விவகாரம் முதலில் பாலிவுட்டில் தான் பூதாகரகமாக வெடித்தது. அதையடுத்து தற்போது கோலிவுட்டில் பல அதிர்வலைகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் தமிழ் சினிமா உலகில் பெண்களின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக குழு அமைக்கப்பட்டு வருகிறது.
இதேபோல் பாலிவுட் சினிமா மற்றும் சின்னத்திரையில் உள்ள பெண்களை பாதுகாக்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவில் நடிகை டாப்சியுடன் ரேணுகா சகானே, அமோல் குப்தா ஆகியோரும் இடம் பெற்றிருக்கிறார்கள்.
இதையடுத்து டாப்சி விடுத்துள்ள செய்தியில், இந்த சினிமா தொழில் நமக்கு ரொட்டியும், வெண்ணெய்யும் தருகிறது. இந்த இடம் சுத்தமாக இருக்க வேண்டும். அதனால் அனைவரும் ஒன்றிணைந்து இந்த இடத்தை சுத்தப்படுத்துவோம். இந்த குழுவின் மூலம் நடிகைகளுக்கு ஏற்பட்டு வரும் பாலியல் ரீதியான சிக்கல்களில் இருந்து அவர்களுக்கு முழுமையான பாதுகாப்பு கொடுப்போம் என்று தெரிவித்துள்ளார்.