இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
சினிமா பிரபலங்கள் குறிப்பாக நடிகைகள் தாங்கள் எதிர்கொண்ட பாலியல் டார்ச்சர்களை 'மீ டூ' என்கிற பிரச்சாரம் மூலமாக சோஷியல் மீடியாவில் வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் சில தினங்களுக்கு முன் மலையாள நடிகை ஒருவர் தனது பெயரை குறிப்பிடாமல், மலையாள குணசித்திர நடிகரான 55 வயதான அலாசன்சியர் லே என்பவர் தனக்கு கொடுத்த பாலியல் சித்தரவதைகள் குறித்து வெளிப்படுத்தி இருந்தார்.
இந்தநிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் சம்பந்தப்பட்ட நடிகை தன்னை வெளிப்படுத்தி கொண்டுள்ளார். அவர் பெயர் திவ்யா கோபிநாத்.. ஆபாசம் என்கிற படத்தில் நடித்தபோதுதான் இதுபோன்ற பாலியல் தொந்தரவுகளை அவர் சந்தித்துள்ளார்.
தற்போது படம் வெளியாகியுள்ள நிலையில் அந்தப்படத்தின் இயக்குனர் ஜபித் நம்ரதத் என்பவரும், நடிகர் அலான்சியர் லேயை விளாசியுள்ளார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றபோது அலான்சியரை சமாளிக்கவும், கண்காணிக்கவுமே ஒரு உதவி இயக்குனரை தனியாக ஒதுக்கியிருந்தாராம். நிறையமுறை உதவி இயக்குனர்களின் சாமர்த்தியத்தால் தான், திவ்யா, அலான்சியரின் தொல்லைகளில் இருந்து தப்பித்துள்ளார் எனவும் கூறியுள்ளார் படத்தின் இயக்குனர்.