பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
பிரபல பாலிவுட் நடிகை பூஜா பட். மீ டூ இயக்கம் குறித்து தனது கருத்தை வெளியிட்டிருக்கிறார். பாலியில் குற்றங்களில் ஆணுக்கும், பெண்ணுக்கும் சம பங்கு உண்டு என்று அவர் கூறியிருக்கிறார். இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:
மீ டூவை நானும் ஆதரிக்கிறேன். பெண்கள் தங்கள் பிரச்சினைகளை இதில் சொல்ல முடிகிறது. ஆனால் ஆணாக பிறப்பதே குற்றம் என்ற உணர்வோடு பெண்கள் செயல்படுவது சரியல்ல. பாலியல் பிரச்சினையில் ஆண்களும் பெண்களும் சமம்தான். ஆண்கள் மட்டும் கெட்டவர்கள் என்று சொல்லி விடமுடியாது. சில நேரம் அவர்கள் எந்த தவறும் செய்யாமல் அநியாயமாக பாலியல் குற்றச்சாட்டில் சிக்கும் சந்தர்ப்பங்கள் இருக்கிறது.
நீதிமன்றங்களிலும் அவர்களுக்கு நீதி கிடைக்காத நிலைமைகளும் உள்ளன. அப்படி நடக்கும்போது அவர்கள் குடும்பங்களின் நிலைமை என்னவாகும் என்பதை நினைத்து பார்க்க வேண்டும். அப்பாவி ஆண்கள் பாதிக்கப்படக் கூடாது. பெண்களும் சில சமயங்களில் அவர்கள் தேவைக்காக தவறுகள் செய்கிறார்கள். இதில் ஆண் எப்படி குற்றவாளியாவார். பாலியல் தொல்லைகள் எல்லா இடங்களிலும் இருக்கிறது. பெண்கள் நினைத்தால் அதை தவிர்க்கவும் முடியும், தடுக்க முடிவும். தவறு நடக்கும்போது ஒத்துழைத்து விட்டு பின்பு புகார் சொல்வதையும் ஏற்க முடியாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.