பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
பாலியல் குற்றச்சாட்டுகளால் பாலிவுட் சினிமா கலகலத்து கிடக்கிறது. தினசரி ஒரு பிரபலத்தின் மீது பாலியல் புகார்கள் வந்தவண்ணம் இருக்கின்றன. இதனாலேயே தான் நடிக்கவுள்ள 'ஹவுஸ்புல்-4' படத்தின் படப்பிடிப்பை நிறுத்தசொல்லி தயாரிப்பாளரிடம் கூறியுள்ளார் அக்சய் குமார்.
காரணம் இந்தப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் நானா படேகரின் மீது ஏற்கனவே நடிகை தனுஸ்ரீ தத்தா பாலியல் புகார் தெரிவித்துள்ளார். இந்தநிலையில் தற்போது படத்தின் இயக்குனர் சாஜித்கான் மீதும் நடிகைகள் சலோனி சோப்ரா, ரேச்சல் ஒயிட் உள்ளிட்ட சில நடிகைகள் பாலியல் குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம்தான் வெளிநாட்டில் இருந்து திரும்பிய அக்சய் குமார், இதனால் டென்சனாகி 'ஹவுஸ்புல்-4' படப்பிடிப்பை தற்போது துவங்கவேண்டாம் என்றும் சம்பந்தப்பட்டவர்களின் மீதான குற்றச்சாட்டுகளில் உண்மை தெளிவானபின் படப்பிடிப்பை துவங்கலாம் என்றும் பாலியல் குற்றசாட்டுகளுக்கு ஆளானவர்களுடன் நான் நடிக்கமாட்டேன் என்றும் கூறி இன்னும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இதனையடுத்து நானா படேகரும், சாஜித் கானும் இந்தப்படத்திலிருந்து விலகியுள்ளார்களாம்.