விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் |
நடிகைகள் தங்களது கடந்த காலத்தில் தங்களுக்கு நிகழ்ந்த பாலியல் தொந்தரவுகள் குறித்த கசப்பான நிகழ்வுகளை மீ ட்டூ (Me Too) என்கிற பிரசாரத்தின் மூலமாக, தற்போது பகிர்ந்துகொண்டு வருகின்றனர். விஜயகாந்தின் கஜேந்திரா, கார்த்திக்-பிரபு நடித்த குஸ்தி ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்த நடிகை புளோராவும் பாலிவுட் பட தயாரிப்பாளர் கௌரங் தோஷி மீது பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக போலீஸில் புகார் அளித்துள்ளார்.
சில வருடங்களுக்கு முன்பு புளோராவும் கௌரங் தோஷியும் நட்பாக வாழ்ந்தபோது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதாம். அப்போது இதுபற்றி புளோரா குற்றம் சாட்டினாலும் ஒரே ஒருவரை தவிர வேறு யாரும் இவரின் பிரச்சனையை காதுகொடுத்து கேட்கவில்லையாம். அந்த ஒருவர் நடிகை ஐஸ்வர்யா ராய் தான்.
அப்போது கௌரங் தோஷி தயாரிப்பில் இந்தியில் நடிக்க ஒப்பந்தாமாகி இருந்த ஐஸ்வர்யா, பெண்களை அடித்து துன்புறுத்தும் ஒருவரின் படத்தில் நடிக்கமாட்டேன் என கூறி அந்தப்படத்தில் இருந்தே வெளியேறிவிட்டாராம். ஒரு சாதாரண நடிகையான தனக்கு ஆதரவாக அவ்வளவு பெரிய நடிகை இப்படி ஒரு முடிவை எடுத்தது, அவர் மீதான மதிப்பை அதிகரிக்க வைத்தது என கூறியுள்ளார் புளோரா.