வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் |
நடிகைகள் தங்களது கடந்த காலத்தில் தங்களுக்கு நிகழ்ந்த பாலியல் தொந்தரவுகள் குறித்த கசப்பான நிகழ்வுகளை மீ ட்டூ (Me Too) என்கிற பிரசாரத்தின் மூலமாக, தற்போது பகிர்ந்துகொண்டு வருகின்றனர். விஜயகாந்தின் கஜேந்திரா, கார்த்திக்-பிரபு நடித்த குஸ்தி ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்த நடிகை புளோராவும் பாலிவுட் பட தயாரிப்பாளர் கௌரங் தோஷி மீது பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக போலீஸில் புகார் அளித்துள்ளார்.
சில வருடங்களுக்கு முன்பு புளோராவும் கௌரங் தோஷியும் நட்பாக வாழ்ந்தபோது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதாம். அப்போது இதுபற்றி புளோரா குற்றம் சாட்டினாலும் ஒரே ஒருவரை தவிர வேறு யாரும் இவரின் பிரச்சனையை காதுகொடுத்து கேட்கவில்லையாம். அந்த ஒருவர் நடிகை ஐஸ்வர்யா ராய் தான்.
அப்போது கௌரங் தோஷி தயாரிப்பில் இந்தியில் நடிக்க ஒப்பந்தாமாகி இருந்த ஐஸ்வர்யா, பெண்களை அடித்து துன்புறுத்தும் ஒருவரின் படத்தில் நடிக்கமாட்டேன் என கூறி அந்தப்படத்தில் இருந்தே வெளியேறிவிட்டாராம். ஒரு சாதாரண நடிகையான தனக்கு ஆதரவாக அவ்வளவு பெரிய நடிகை இப்படி ஒரு முடிவை எடுத்தது, அவர் மீதான மதிப்பை அதிகரிக்க வைத்தது என கூறியுள்ளார் புளோரா.