அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
நடிகைகள் தங்களது கடந்த காலத்தில் தங்களுக்கு நிகழ்ந்த பாலியல் தொந்தரவுகள் குறித்த கசப்பான நிகழ்வுகளை மீ ட்டூ (Me Too) என்கிற பிரசாரத்தின் மூலமாக, தற்போது பகிர்ந்துகொண்டு வருகின்றனர். விஜயகாந்தின் கஜேந்திரா, கார்த்திக்-பிரபு நடித்த குஸ்தி ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்த நடிகை புளோராவும் பாலிவுட் பட தயாரிப்பாளர் கௌரங் தோஷி மீது பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக போலீஸில் புகார் அளித்துள்ளார்.
சில வருடங்களுக்கு முன்பு புளோராவும் கௌரங் தோஷியும் நட்பாக வாழ்ந்தபோது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதாம். அப்போது இதுபற்றி புளோரா குற்றம் சாட்டினாலும் ஒரே ஒருவரை தவிர வேறு யாரும் இவரின் பிரச்சனையை காதுகொடுத்து கேட்கவில்லையாம். அந்த ஒருவர் நடிகை ஐஸ்வர்யா ராய் தான்.
அப்போது கௌரங் தோஷி தயாரிப்பில் இந்தியில் நடிக்க ஒப்பந்தாமாகி இருந்த ஐஸ்வர்யா, பெண்களை அடித்து துன்புறுத்தும் ஒருவரின் படத்தில் நடிக்கமாட்டேன் என கூறி அந்தப்படத்தில் இருந்தே வெளியேறிவிட்டாராம். ஒரு சாதாரண நடிகையான தனக்கு ஆதரவாக அவ்வளவு பெரிய நடிகை இப்படி ஒரு முடிவை எடுத்தது, அவர் மீதான மதிப்பை அதிகரிக்க வைத்தது என கூறியுள்ளார் புளோரா.