மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் |
பிரபல நடிகை புளோரா, தமிழில் கஜேந்திரா படத்தில் விஜயகாந்த் ஜோடியாக நடித்தார். திண்டுக்கல் சாரதி படத்தில் கருணாஸ் ஜோடியாக நடித்தார், கார்த்திக் ஜோடியாக குஸ்தி படத்தில் நடித்தார். சில படங்களில் ஒரு பாடலுக்கு ஆடியுள்ளார். தற்போது புளோரா பாலிவுட் தயாரிப்பாளர் கவுரவ் தோஷி தன்னை அடித்து துன்புறுத்தி பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம் சாட்டியுள்ளார். ஜோஷி அடித்ததால் பட்ட காயத்துடன் இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டிருக்கிறார். அவர் தனது பேஸ்புக்கில் எழுதியிருப்பதாவது:
நானும், தயாரிப்பாளர் கவுரங் தோஷியும் சில மாதங்கள் ஒன்றாக வாழ்ந்தோம். 2007-ம் ஆண்டு காதலர் தினத்தில் என்னை அவர் கடுமையாக தாக்கினார். ஒரு வருடம் தொடர்ந்து எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். நான் எந்த தவறும் செய்யவில்லை. ஆனாலும் என்னை அடித்து சித்ரவதை செய்தார். இதனால் எனது தாடையின் எலும்பு முறிந்தது. பயந்தபடி அவரை விட்டு விலகினேன்.
கவுரங் தோஷி அப்போது சக்தி மிக்கவராக இருந்தார். எல்லோரும் அவருக்கு ஆதரவாக செயல்பட்டனர். நான் சினிமாவுக்கு புதிதாக வந்தவள் என்பதால் அவரை எதிர்த்து எதுவும் செய்ய முடியவில்லை. அவரும் இதையே சொல்லி என்னை மிரட்டினார். என்னை சினிமாவில் இருந்து ஒழித்து விடுவதாக எச்சரித்தார். அவர் சொன்னபடியே சில படங்களில் இருந்து என்னை நீக்கினார்கள். புதிய படங்களில் ஒப்பந்தம் செய்யவும் மறுத்தனர். இதனால் மனம் உடைந்து போனேன். எனது வாழ்க்கையே சிதைந்து போனது.
இவ்வாறு புளோரா கூறியுள்ளார்.