'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தெலுங்கு தமிழ் திரையுலகை சேர்ந்த நடிகர்கள், இயக்குனர்கள் மீது அடுக்கடுக்காக பாலியல் குற்றச்சாட்டுக்களை கூறி அதன் மூலம் கடந்த சில மாதங்களாக சர்ச்சை ராணியாக வலம் வருபவர் தான் தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி. தற்போது இவரது குற்றச்சாட்டு பாலிவுட் சூப்பர் நடிகர்கள் பக்கம் திரும்பியுள்ளது.. ஆனால் வேறு விஷயத்தில்.
ஆம் கடந்த சில நாட்களாக பாலிவுட்டில் புகைந்து கொண்டிருக்கும் நடிகை தனுஸ்ரீ தத்தா - நானா படேகர் விஷயத்தில் அமிதாப் பச்சன், ஆமீர்கான் இருவரும் கூறிய கருத்துக்கள் சர்ச்சையை கிளப்பிவிட்டுள்ளன. கூடவே ஸ்ரீரெட்டியின் கோபத்தையும் கிளறிவிட்டுள்ளன.
இதுபற்றி டுவிட்டரில் காட்டமாக பதிவிட்டுள்ள ஸ்ரீரெட்டி, “ஆமீர்கானிடம் இருந்து இதுபோன்ற பதிலை எதிர்பார்க்கவில்லை.. உண்மையான வாழ்க்கையில் நடிப்பதை நிறுத்துங்கள் ஜி. அதேபோல அமிதாப் ஜி, இதுபோன்ற பெண்களில் உங்கள் பேத்தியின் உருவத்தை உங்களால் பார்க்க முடியவில்லையா..? பெண்களை மதிக்க முடியாவிட்டால் உங்களுக்கு எந்த இந்திய தயாரிப்பையும் விளம்பரப்படுத்தும் தகுதி இல்லை. தனுஸ்ரீ விவகாரத்தில் நீங்கள் நடந்துகொண்டதை பார்த்து அதிர்ச்சியாக இருக்கிறது” என கூறியுள்ளார்.