கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி | ஜிம்மில் வெறித்தனமான ஒர்க்கவுட்டில் இறங்கிய ரகுல் ப்ரீத் சிங் | டப்பிங் யூனியன் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற ராதாரவி |
பிரபல இந்தி நடிகையான ஸ்ரத்தா கபூர், பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலின் வாழ்க்கை கதையில் உருவாகும் படத்தில் நடிப்பதற்காக சில மாதங்களாக தீவிர பேட்மிண்டன் பயிற்சி எடுத்து வந்தார். இந்த படத்தின் அறிவிப்பு பிரமாண்டமாக வெளியிடப்பட்டபோதும், ஸ்ரத்தா கபூர் வேறு சில படங்களில் ஏற்கனவே ஒப்பந்தமாகியிருந்ததால் அந்த படம் திட்டமிட்டபடி தொடங்கவில்லை.
இந்த நிலையில், இந்தியில் ஸ்ரத்தா கபூர் நடித்து வந்த ஸ்திரி படம் வெளியாகி விட்ட நிலையில், பிரபாசின் சாஹோ படத்திலும் அவர் நடித்து முடித்து விட்டதால், இன்று முதல் சாய்னா நேவாலின் வாழ்க்கை வரலாறு கதையில் ஸ்ரத்தா கபூர் நடிக்கிறார். அப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் தொடங்கியிருக்கிறது. அமொலே குப்தே என்பவர் இந்த படத்தை இயக்குகிறார்.