டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
இந்தியாவின் பிரபல இயக்குனரான ஷியாம் பெனகலிடம் உதவி இயக்குனராக பணியாற்றி பாலிவுட்டில் இயக்குனர் ஆனவர் கல்பனா லஜ்மி. பிரபல நடிகை தீபிகா படுகோனேவின் உறவினர். 40 வருடங்களாக திரைத் துறையில் இருந்த கல்பவான இயக்கியது 10 படங்கள்தான். ஆனால் அத்தனை படங்களும் ஏதோ ஒரு வகையில் சிறப்பானதாக இருக்கும். அல்லது விருதுகளை குவித்திருக்கும்.
பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையம்சம் உள்ள படங்களை இயக்கி கவனம் பெற்றவர். ஏக்பல், டாமன், ருடாலி, சிங்காரி உள்ளிட்ட பல படங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றன. ருடாலி படத்தில் ராஜ் பப்பர், டிம்பிள் கபாடியா நடித்து இருந்தனர். இந்தப் படம் சிறந்த வெளிநாட்டு பட பிரிவுக்கான ஆஸ்கார் விருதுக்கு இந்தியா சார்பில் அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது. இவர் இயக்கிய கடைசி படம் சிங்காரி. இதில் மிதுன் சக்கரவர்த்தி, சுஷ்மிதா சென் நடித்து இருந்தனர்.
64 வயதான கல்பனாவுக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக தீவிர சிகிச்சை எடுத்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக அவருக்கு சிறுநீரக கோளாறும் ஏற்பட்டது. இதை தொடர்ந்து சிகிச்சைக்காக மும்பையில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலன் இன்றி இறந்தார். அவரது உடலுக்கு பாலிவுட் முன்னணி நடிகர் நடிகைகள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.